கதாநாயகிக்காக மாற்றப்பட்ட சன் டிவி சீரியல் கதை.. சீரியலிலும் கர்ப்பம்! எதிர்பார்க்காத மாற்றங்கள்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியலில் கதாநாயகிக்காக மொத்த கதையும் மாற்றப்பட்டு இருக்கிறது. இது ரசிகர்களின் மத்தியில் வியப்பை கொடுத்து இருக்கிறது.
நிஜ வாழ்க்கையிலும் கர்ப்பமாக இருக்கும் நடிகைக்காகவே சீரியலிலும் அவர் கர்ப்பமாக இருப்பதாக கதை மாற்றப்பட்டிருக்கிறது. அது சன் டிவியில் ஒளிபரப்பாகும் செவ்வந்தி சீரியலில் தான்.
ரச்சிதாவை பற்றி மைனா கூறிய ரகசியங்களை புறம் பேசும் ஏடிகே... இப்படியா பேசணும்? கலாய்க்கும் ரசிகர்கள்
கதாநாயகியால் பிரபலம்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு பெற்று விடும். அந்த வகையில் தற்போது செவ்வந்தி சீரியலும் இடம்பிடித்திருக்கிறது. இந்த சீரியல் ஆரம்பத்தில் அந்த அளவிற்கு பிரபலமாகாமல் இருந்தாலும், இந்த சீரியலின் கதாநாயகிக்கு சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாகவே அவர் இந்த சீரியலில் நடித்து வருகிறார் என்கிற பெயர் அடிக்கடி அடிபட்ட பிறகு இந்த சீரியலுக்கு ரசிகர்கள் பலர் தொடர்ந்து பார்க்க தொடங்கி விட்டனர்.
கதாநாயகன் திடீர் மரணம்
செவ்வந்தி சீரியலில் திவ்யா ஸ்ரீதர் தான் கதாநாயகியாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ராகவ் இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த சீரியல் திங்கள் முதல் சனி வரை மதியம் 12.30 க்கு ஒளிபரப்பாகி வருகிறது. செவ்வந்தி கேரக்டரில் திவ்யாவும் ,ராகவ் மனோ கேரக்டரிலும் நடித்து வந்தனர். இந்த நிலையில் கதாநாயகனாக ராகவ் திடீரென இறந்து போய்விடுவது போல இந்த சீரியலில் கதை அமைந்திருக்கிறது. அதற்குப் பிறகு பல்வேறு போராட்டங்களை சந்திக்கும் செவ்வந்தி தன்னுடைய குடும்பத்தையும் குழந்தைகளையும் இனி எப்படி சமாளிக்க போகிறார் என்று ஒளிபரப்பாகி வருகிறது.
சீரியலிலும் கர்ப்பம்
இந்த நிலையில் இந்த சீரியல் இப்போது 121 எபிசோடுகள் முடிவடைந்து இருக்கிறது. இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த சீரியலில் கதாநாயகி ஆன திவ்யா ஸ்ரீதரும் கர்ப்பமாக இருப்பது போல பிரமோ வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே திவ்யஸ்ரீதர் கர்ப்பமாக இருப்பதால் இவர் இந்த சீரியலில் இருந்து விலகிவிடுவாரோ என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். தனக்கு வேறு வருமானம் இல்லை. இந்த சீரியலில் மட்டும் தான் தான் நடித்து வருவதால் இந்த சீரியலில் இருந்து என்னால் விலக முடியாது என்று ஏற்கனவே திவ்யா கூறியிருந்தார். அதே நிலையில் இப்போது இவருக்காகவே இந்த சீரியலில் இவர்கள் கர்ப்பமாக இருப்பது போல பிரமோ வெளியேயிருக்கிறது.
கதையில் திடீர் திருப்பம்
சீரியல் அணியினரின் திடீர் கதை மாற்றத்தால் சீரியல் ரசிகர்கள் மட்டுமல்லாமல் திவ்யா ஸ்ரீதரின் ரசிகர்களும் அதிகமாக சந்தோஷம் அடைந்து இருக்கின்றனர். இனி எப்படியும் திவ்யா இந்த சீரியலில் இருந்து விலக மாட்டார் என்று அவர்கள் கூறி வருகிறார்கள். கணவர் இறந்து பிறகு திடீரென செவ்வந்தி கர்ப்பமாக இருக்கும் செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இந்த நிலையில் இனி எப்படி குடும்பத்தையும் இந்த ஊரையும் செவ்வந்தி சமாளிக்க போகிறார் என்பதுதான் சீரியலின் விறுவிறுப்பான அடுத்த கட்டமாக இருக்கப் போகிறது என்று சீரியல் அணியினர் கூறியிருக்கின்றனர்.