“திருநெல்வேலிக்காரர்” தமிழா தமிழா ஆவுடையப்பன் மனைவி யார் தெரியுமா? திரைப்படங்களை மிஞ்சும் காதல் கதை!
சென்னை: தொகுப்பாளர் ஆவுடையப்பன் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கு முன்பு இவர் பத்திரிக்கையாளராக பலருக்கும் பரிச்சயம் அடைந்திருந்தாலும் இப்போது தமிழா தமிழா நிகழ்ச்சியில் பல எபிசோடுகளை சுவாரசியமாக நடத்திக் கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் ஜீ தமிழ் நிகழ்ச்சியில் தன்னுடைய காதல் கதையை சொல்லி பலரையும் வியக்க வைத்திருக்கிறார்.
அதாவது பல வருடங்களாக காதலித்து வந்த பெண்ணையே தன்னுடைய மனைவியாக மாற்றிய ஆவுடையப்பன் தன்னுடைய காதல் கதையில் ஏற்பட்ட சுவாரசியங்கள் மற்றும் கஷ்டங்கள் குறித்து அந்த நிகழ்ச்சியில் மனம் திறந்து பேசி இருக்கிறார். அது பலருடைய பாராட்டுகளை பெற்று வருகிறது.

அந்த வகையில் ஆவுடையப்பனின் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் என்பது தானாம். அவரும் அவருடைய மனைவி சங்கீதாவும் ஒன்றாக படித்திருக்கிறார்கள். ஆனால் ஆவுடையப்பன் வீட்டில் இருந்து கல்லூரிக்கு போய் படித்து விட்டு வந்து விடுவாராம். ஆனால் அவருடைய மனைவி கல்லூரியில் தங்கி படித்திருக்கிறார். இதனால் வாரத்திற்கு ஒருமுறைதான் ஊருக்கு வருவாராம்.
அந்த ஒரு முறை ஊருக்கு வரும் சங்கீதாவை பார்ப்பதற்காக ஆவுடையப்பன் ரயில்வே ஸ்டேஷன் அல்லது பஸ் ஸ்டாண்டில் காத்திருப்பாராம். ஒவ்வொரு முறையும் அவருடைய மனைவி ரயிலிலோ அல்லது பஸ்ஸிலோ தான் வருவாராம். அவருக்கு காலேஜிலிருந்து வருவதற்கு எது ஏதுவாக இருக்கிறதோ அதில் வந்து விடுவாராம். ஆனால் ஒவ்வொரு முறையும் இந்த முறை சங்கீதா பஸ்ஸில் தான் வருவார் அல்லது இந்த முறை சங்கீதா ட்ரெயினில் தான் வருவார் என்று சரியாக யூகித்து ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வாரமும் ஆவுடையப்பன் போய் நின்று விடுவாராம்.

காரணம் அப்போதெல்லாம் சங்கீதாவிடம் தன்னுடைய காதலை ஆவுடையுப்பன் சொல்லவே இல்லையாம். ஒருதலையாக காதலித்துக் கொண்டிருந்த ஆவுடையப்பன் மூன்று வருடங்களுக்கு பிறகு தான் தன்னுடைய காதலை சொல்லி இருக்கிறார். ஆனால் அப்போதும் சங்கீதா அவரிடம் தன்னுடைய சம்மதத்தை சொல்லவில்லையாம். அப்போது சங்கீதாவிற்கு நாம இப்போதுதான் படித்துக் கொண்டிருக்கிறோம், வீட்டில் நம்முடைய காதல் தெரிந்தால் சரிப்பட்டு வராது என்று தெரிந்து காதலை சொல்லவில்லையாம்.
ஆனாலும் ஆவுடையப்பன் மீது ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்ததாம். இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை என்றாலும் சங்கீதா காலேஜிலிருந்து வீட்டுக்கு வரும்போது பஸ் ஸ்டாண்டில் ஆவுடையப்பன் நிற்கிறாரா என்று பார்த்துக்கொண்டே வருவாராம். ஆனால் சரியாக அந்த இடத்தில் ஆவுடையப்பன் நிற்கும்போது சங்கீதாவிற்கு மனதுக்குள் பட்டாம்பூச்சி எல்லாம் பறக்குமாம். அப்படியே கல்லூரி வாழ்க்கையும் முடிந்த பிறகு ஒரு முறை சங்கீதா தன்னுடைய காதலை ஆவுடையப்பனிடம் சொல்லிவிடலாம் என்று அவருக்கு போன் போட்டு இருக்கிறார்.
ஆனால் அவருடைய போன் ரீச் ஆகவில்லையாம். அதுபோல ஆவுடையப்பன் வீட்டைத் தாண்டி தான் சங்கீதா வீட்டிற்கு போக வேண்டுமாம். ஆவுடையப்பன் போனை எடுக்காததால் அது பற்றியே சங்கீதா யோசித்துக் கொண்டு வீட்டிற்கு போய் கொண்டு இருந்திருக்கிறார். அப்போது ஆவுடையப்பன் வீட்டில் சிலர் கூட்டமாக நின்று இருக்கிறார்கள், அதனால் சங்கீதா கடந்து போய்விட்டாராம். பிறகு தான் அவருக்கு ஆவுடையப்பனின் அம்மா இறந்து போய்விட்டார் என்று தெரிந்திருக்கிறது.

ஆனால் அதே நேரத்தில் தான் ஆவுடையப்பன் தன்னுடைய அம்மா இறந்த துக்கத்தில் கையில் இருந்த போனை உடைத்து இருக்கிறார் அதற்கு பிறகு தான் சங்கீதா அவருக்கு போன் ட்ரை பண்ணி இருக்கிறார். பிறகு ஒரு வாரம் கழித்து போன் சரி செய்து கையில் கிடைத்திருக்கிறது. அப்போது மீண்டும் சங்கீதா போன் பண்ணி இருக்கிறார். அப்போதுதான் தன்னுடைய காதலை சங்கீதா சொல்லி இருந்தாராம்.
நான் பிப்ரவரி 17ஆம் தேதி உனக்கு போன் பண்ணினேன் காதலை சொல்வதற்காக தான் என்று சங்கீதா சொல்ல அதைக் கேட்டு ஆவுடையப்பன் கண் கலங்கி இருந்தாராம். காரணம் தன்னுடைய அம்மா தன்னை விட்டுப் போய்விட்டார் என்று கவலையில் இருந்தபோது எனக்கு அம்மாவாக கிடைத்த உறவு இது என்று சங்கீதாவை குறித்து சந்தோஷப்பட்டு இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு இப்போது அழகான ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் இவர்களுடைய காதல் கதையைக் கேட்ட பலர் இவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
-
விஜய் பிரண்ட் சஞ்சீவ்வை சுற்றும் பிரச்சனை.. உண்மை தெரியாமல் பேசாதீங்க! ஓபனாக உடைத்து பேசிய ப்ரீத்தி சஞ்சீவ் -
யூத் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்..! ப்ளூ சட்டை மாறன் ஒரே வார்த்தையில் இப்படி சொல்லிட்டாரே! -
ஜனநாயகனின் “Mute” செய்யப்பட்ட அரசியல் வசனம்.. இதுதான் காரணமா? விஜய்க்கு கிடைக்கும் நிம்மதி! -
சினிமாவை விட்டு விலகும் திரிஷா.. காரணம் இதுதானா? அதிர்ச்சி பின்னணி! லீக்கான தகவல்கள் -
ஐடி விங் மூலமாக வெறுப்பை பரப்புறாங்க.. பொறுப்பு உங்களிடமே உள்ளது தலைவரே! வெளுத்த நடிகை நிவேதா -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா?












Click it and Unblock the Notifications