தமிழா தமிழா நிகழ்ச்சியில் இருந்து கரு பழனியப்பன் விலகியது ஏன்? இதுதான் காரணமா?
தமிழா தமிழா விவாத நிகழ்ச்சியிலிருந்து கரு பழனியப்பன் விலகியது ஏன் ?
சென்னை: தமிழா தமிழா நிகழ்ச்சியில் இருந்து கரு பழனியப்பன் வெளியேற காரணம் என்ன?
ஜீ தமிழ் தொலைகாட்சியில் தமிழா தமிழா எனும் விவாத நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருந்து நடத்தி வந்தவர் கரு பழனியப்பன். இவர் பார்த்திபன் கனவு திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர்.
இவர் சதுரங்கம், சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், மந்திர புன்னகை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். சில படங்களில் இவர் நடித்தும் உள்ளார். இந்த நிலையில் ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த தமிழா தமிழா எனும் நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கி வந்தார்.

நீயா நானா
விஜய் டிவியில் வரும் நீயா நானா போல் ஏதாவது ஒரு டாப்பிக்கை எடுத்து அதை ஆதரிப்போர், எதிர்ப்போர் என இரு பிரிவுகளாக பிரித்து தமிழா தமிழா நிகழ்ச்சியில் விவாதத்தை நடத்தி வந்தார் கரு பழனியப்பன். இவர் திராவிட இயக்க சிந்தனையாளர். கரு பழனியப்பன் தனது நிகழ்ச்சியிலும் திராவிட சிந்தனைகளையும் கருத்துகளையும் தொடர்ந்து பேசி வந்தார்.

உறுதி
இந்த நிலையில் அவர் அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை உறுதிப்படுத்தும் வகையில் கரு பழனியப்பன் தனது ட்விட்டரில் "எங்கெங்கோ இருந்து பிறந்தநாள் வாழ்த்துச்சொன்ன அனைவருக்கும் நன்றி! அன்பு!! முத்தங்கள்!!!

முகம் அறியா தோழமைகள்
இப்படி முகம் அறியா தோழமைகளின் அன்பும், ஆசிரியர்களின் அறிவுமே என்னை துணிவுடன் முடிவெடுக்க, வழிகாட்டி இருக்கிறது. தமிழ் பரப்பில் தளம் அமைத்துக் கொடுத்த ஜீ தமிழ் உடனான நான்கு வருட "தமிழா தமிழா" பயணம் இனிதே முடிவுக்கு வந்தது...!

சமூக நீதி
சமூக நீதி, சுயமரியாதை, திராவிடம் என்ற சொல்லாடல்கள் கசப்பாய் இருக்கும் எனில், அந்தப் பயணத்தை முடிவுக்கு கொண்டு வருவதே இனிதானது. எளியோரின் குரலாய் ஒலிக்க, இன்னும் பரந்துபட்ட தளத்தில் விரைவில் சந்திப்போம்" என்று அவர் பதிவிட்டுள்ளார். கரு பழனியப்பனுக்கு நேற்று பிறந்தநாள்.

சிறந்த பேச்சாளர்
சிறந்த பேச்சாளராக அறியப்படும் கரு பழனியப்பன் திராவிட கருத்துகளை மேடைகளில் பேசி வருகிறார். அவ்வப்போது பட்டிமன்றங்களிலும் கலந்து கொண்டு பேசுவார். சில நேரங்களில் நடுவராகவும் கலந்து கொண்டு தனது கருத்துகளை இடித்துரைப்பார். இவர் மந்திர புன்னகையில் கதாநாயகனாக அறிமுகமானார். இவர் காரைக்குடியை சேர்ந்தவர்.

புத்தக பிரியர்
கண்ணதாசன், ஜெயகாந்தன், அசோகமித்ரன் ஆகிய எழுத்தாளர்களின் படைப்புகளை விரும்பி படிப்பார். சிறு வயது முதலே தனது தந்தையின் மூலம் புத்தகம் படிக்கும் ஆவலை வளர்த்து கொண்டார். இவர் இயக்குநர் பார்த்திபனுடன் பணியாற்றியுள்ளார். பார்த்திபன் கனவு திரைப்படத்திற்கு சிறந்த இயக்குநருக்கான தமிழக அரசின் விருதை பெற்றார். அது போல் சதுரங்கம் படத்திற்காக சிறந்த எழுத்தாளருக்கான விருதையும் பெற்றுள்ளார்.

காமெடி
இவர் டி பிளாக் படத்தில் கல்லூரி ஓனராக நடித்திருந்தார். தமிழா தமிழா நிகழ்ச்சியை நடத்தும் இவருடன் நீயா நானா கோபிநாத்தை வைத்து ஒப்பீடுகளையும் நெட்டிசன்கள் செய்து வந்தனர். அவருடைய கருத்துகளையும் கோபியின் கருத்துகளையும் நெட்டிசன்கள் விவாதப்பொருளாக முன் வைப்பதும் உண்டு. தற்போது இவர் தமிழா தமிழாவிலிருந்து விலகுவதால் இவருக்கு பதில் யார் இந்த நிகழ்ச்சியை நடத்துவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. எனினும் இந்த நிகழ்ச்சியை காமெடியாகவும் நடத்தி வந்த நிலையில் நிகழ்ச்சியின் ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications