ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.. அதுவும் “இருமலர்கள்” அபி முதல் யாரெல்லாம் பாருங்க!
சென்னை: முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றான ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆனால் இந்த சேனல் தொடங்கிய காலகட்டத்தில் அதிகமான டப்பிங் சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.
ஆனால் இப்போது புதியதாக சீரியல்கள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருந்தாலும் டப்பிங் சீரியல்கள் வரவில்லை. இது சீரியல் ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆரம்ப காலகட்டத்தில் ஜீ தமிழ் மட்டும் அல்லாமல் கலர்ஸ் தமிழ் பாலிமர் என்று பல சேனல்களில் பல டப்பிங் சீரியல்கள் ஒளிபரப்பானது.

ஜீ தமிழில் கூட "இனிய இரு மலர்கள்" சீரியல் அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் மறந்திருக்க முடியாது. அதில் அபி மற்றும் பிரத்யாவிற்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதுபோல பிரத்யாவின் தங்கை "அம்மு" கேரக்டரில் நடித்த நடிகை "மிருணாள் தாகூர்" அவ்வளவு சீக்கிரத்தில் யாராலும் மறந்துவிட முடியாது. அவர் இப்போது வெள்ளித்திரையில் கொடி கட்டி பறக்கும் முன்னணி நடிகையாக மாறி இருக்கிறார்.
காதல் அக்கா தங்கை பாசம் என்று மக்கள் விரும்பும் பல விஷயங்கள் இந்த சீரியலில் இருந்தது. அதனாலேயே இந்த சீரியல் பல வருடங்களாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்தது. ஆனால் எப்போது இது போன்ற சீரியல்கள் இல்லையே என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தற்போது டப்பிங் சீரியல்கள் எதுவும் ஒளிபரப்பாகாத நிலையில் ரசிகர்களின் கோரிக்கைகளை ஏற்று இரண்டு டப்பிங் சீரியல்களை ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது டிவி சேனல், அதன்படி வரும் திங்கள் ( மே 27 ) முதல் மதியம் 3 மணிக்கு "நானே வருவேன்" என்ற டப்பிங் சீரியலும் இரவு 10.30 மணிக்கு "லட்சுமி கல்யாணம்" என்ற சீரியலும் ஒளிபரப்பாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நானே வருவேன் சீரியல் இந்தியில் ராதா மோகன் ( Pyar Ka Pehla Naam ) என்ற பெயரில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற சீரியலாகும், இதில் ஷபீர் நாயகனாக நடிக்க நிஹாரிகா ராய் நாயகியாக நடித்துள்ளார்.
அதே இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள "லட்சுமி கல்யாணம் சீரியல்" ஹிந்தியில்" பாக்கியலட்சுமி" என்ற பெயரில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற சீரியலாகும். இதில் "ரோஹித் சுசாந்தி" நாயகனாக நடிக்க "ஐஸ்வர்யா கரே" நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் திங்கள் முதல் இந்த இரண்டு சீரியல்கள் ஒளிபரப்பாக இருக்கிறது.
-
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
நகைக்கடன் வைத்த 3 பேரில் ஒருவர் கவனிக்கலனா பிரச்சனை? RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது? -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
நாதக கூட்டத்தில் ஒலித்த டிவிகே கோஷம்.. டீயாடா விக்கிறாய்? தற்குறிகள்! டென்ஷனான சீமான்..ஒரே பரபரப்பு -
கூட்டணி மாறியதால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலை! ஆனால் அது உண்மைதான்! எடப்பாடி பழனிசாமி -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு












Click it and Unblock the Notifications