வீடியோ காலில் மனைவி.. எந்த கணவனும் பார்க்க கூடாத கோலம்.. தமிழா தமிழாவில் கண்ணீர் விட வைத்த கதை
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியின் கடந்த வார எபிசோடில், "வாழ்க்கைத் துணை இறந்த பிறகு அதிகமாக கஷ்டப்படுவது கணவரா, மனைவியா?" என்ற தலைப்பில் நடைபெற்ற விவாதம் ரசிகர்களின் மனதை நெகிழ வைத்தது. இந்த விவாதத்தில் ஆண்கள் அணியில் கலந்து கொண்ட ஒரு இளைஞர், தன் மனைவி மறைவுக்கு பிறகு அனுபவித்து வரும் வலி, வெறுமை மற்றும் மனவேதனையை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார்.
தலைமுடியை வெட்டாமல் கொண்டை வைத்துக் கொண்டு, கையில் மனைவியின் பெயரை பச்சை குத்தியிருந்ததும், உடம்பில் மனைவியின் உருவத்தை பச்சை குத்தியிருந்ததும் அவரை பார்த்த அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. அவரின் வெளிப்படையான காதலும், மனைவியின் மீது வைத்திருந்த ஆழமான பாசமும், பார்வையாளர்களை கண்கலங்க வைத்தது.

கருத்தை உடைத்த மனிதர்
இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருந்த ஆவுடையப்பன்,"பொதுவாக காதலில் பெண்கள்தான் அதிகம் உறுதியானவர்கள் என்று சொல்லப்படுவது உண்டு. ஆனால் அந்த கருத்தை இந்த இளைஞர் உடைத்துள்ளார். ஆண்களும் காதலில் எவ்வளவு ஆழமான உறுதியுடன் இருப்பார்கள் என்பதை இவர் நிரூபித்திருக்கிறார்" என்று பாராட்டினார். இந்த வார்த்தைகள் நிகழ்ச்சியை பார்த்த பலரையும் தொட்டது.
காதலித்து திருமணம்
அந்த இளைஞரும் அவரது மனைவியும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். குடும்ப சம்மதம் இல்லாததால், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி வாழ்க்கையைத் தொடங்கியுள்ளனர். திருமணத்திற்கு பிறகு முதல் இரண்டு மாதங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாகவே சென்றதாக அவர் கூறினார்.
மனைவி வீட்டில் ஒரே மகள் என்பதால், பெற்றோர் பின்னர் அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளனர். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, இருவரும் மீண்டும் கணவரின் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். மனைவி வீட்டிலேயே தங்கிக்கொள்ளும்படி பெண்ணின் பெற்றோர் கேட்டிருந்தாலும், "அக்காவின் திருமணம் இன்னும் நடக்கவில்லை; இந்த நேரத்தில் நானும் வீட்டை விட்டு வந்துவிட்டால் சரியாக இருக்காது" என்று அந்த இளைஞர் திரும்பி வந்ததாக சொன்னார்.
தீபாவளி அழைப்பு
பின்னர் தீபாவளி நேரத்தில், மனைவி தன் வீட்டிற்கு செல்ல அழைத்துச் சென்றுள்ளார். கணவரையும் வர சொல்லியிருக்கிறார். அவர், "நான் வந்து பார்த்துவிட்டு திரும்பிவிடுகிறேன்" என்று கூறியுள்ளார். ஆனால் மனைவியின் பெற்றோர், "நீ இங்கேயே இரு. நீ இங்கே இருந்தால் உன் கணவர் இங்கே வருவார்" என்று சொல்லி, அவரை அங்கேயே தங்க வைத்துள்ளனர். இதுதான் இருவருக்கிடையே மன அழுத்தத்தை உருவாக்கியதாக அந்த இளைஞர் கூறினார்.
மனைவி, "என்னை பெற்றோர் கணவர் வீட்டிற்கு அனுப்ப மறுக்கிறார்கள்; நீயும் என்னுடன் வரவில்லை" என்று மனவிரக்தியுடன் தொடர்ந்து போன் செய்து வந்ததாகவும், அவர் வேலை காரணமாக "பிறகு பேசுகிறேன்" என்று சில நேரங்களில் தள்ளிப் போட்டதாகவும் சொன்னார்.
கண் முன்னே நடந்த துயரம்
ஒரு கட்டத்தில், "ஒரு முறை வீடியோ காலில் பேசு" என்று மனைவி கேட்டுள்ளார். அவர் வீடியோ காலில் பார்த்த போது, மனைவி தற்கொலை செய்ய தயாராக இருந்த காட்சி அவர் கண்முன்னே நடந்துள்ளது. அவர் வீடியோ காலில் இணைந்த நொடியில், மனைவி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக அவர் கண்ணீருடன் தெரிவித்தார்.
இந்த சம்பவம் அவரது வாழ்க்கையை முற்றிலும் மாற்றிவிட்டதாகவும், "இனி நான் எந்த பெண்ணையும் திருமணம் செய்ய மாட்டேன். ஒரு விதத்தில், என் மனைவியின் இறப்புக்கு நானும் காரணமாகிவிட்டேன் என்ற குற்ற உணர்ச்சி என்னை விடவில்லை. அவளுடன் எப்படி எல்லாமோ வாழ வேண்டும் என்று கனவுகள் கண்டேன்" என்று அவர் உடைந்த குரலில் பேசினார்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல
இந்த கதையை கேட்ட பலரும், "உலகத்தில் பெண்கள் பலரும் எத்தனையோ பெரிய பிரச்சனைகளை தாங்கிக்கொண்டு வாழும் நிலையில், ஒரு குடும்பப் பிரச்சனை காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டது மனதை வலிக்க வைக்கிறது" என்று வேதனை தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில்,
தற்கொலை எந்த பிரச்சனையுக்கும் தீர்வு அல்ல; வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தாலும் பேசித் தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்ற செய்தியும் இந்த சம்பவம் மூலம் மீண்டும் நினைவூட்டப்பட்டுள்ளது.
இந்த இளைஞரின் கதை, காதல் என்றால் சுகமான நினைவுகள் மட்டுமல்ல, பொறுப்பு, புரிதல், ஒருவரையொருவர் விட்டுக் கொடுக்கத் தெரிந்த மனப்பக்குவமும் அவசியம் என்பதை உணர்த்தும் ஒரு வலியான உண்மை.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications