பிராமணர்கள் தான் சபரிமலை கோயில் தீட்சிதர் ஆக வேண்டுமா? ஹைகோர்ட்டில் பிற ஜாதி தீட்சிதர்கள் வழக்கு
திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிராமணர்கள்தான் தீட்சிதர்கள் ஆக முடியும் என்ற எழுதப்படாத விதிமுறைக்கு எதிராக பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த தீட்சிதர்கள் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்
கேரளாவில் குறிப்பிட்ட காலம் வரை அனைத்து துறைகளிலும் மலையாள பிராமணர்களின் ஆதிக்கம் அதிக அளவில் இருந்தது. கோயில்கள் முதல் அரசுத் துறைகள் வரை அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்தன.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் கூட இதே நிலைதான் அங்கு நீடித்தது. பிறகு கம்யூனிச, சோஷலிஷ சித்தாந்தங்கள் கேரளாவில் வலுப்பெறத் தொடங்கி, அரசியல் இயக்கங்களாகவும் மாறியதால் அனைத்து சமூகத்தினரும் அரசுத் துறைகளில் கால்பதிக்க தொடங்கினர். அதன் ஒருபகுதியாக, கோயில்களும் பிராமணர்களின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டன.

வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை
கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தாலும், அவற்றை நிர்வகிக்கும் தேவசம் வாரியத்தில் பிராமணர்களின் ஆதிக்கம் தொடர்ந்தது. இதனால் கேரளாவில் உள்ள கோயில்களில் பிராமணர்கள் மட்டுமே பூசாரிகள், அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டு வந்தனர். இதனை எதிர்த்து பல சட்ட ரீதியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. இதன் விளைவாக, கேரளாவில் உள்ள கோயில்களில் பிராமணர் அல்லாதவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க தேவசம் வாரியம் கடந்த 2017-ம் ஆண்டில் நடவடிக்கை எடுத்தது. இதன் தொடர்ச்சியாக, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களும் தற்போது கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.

சபரிமலை கோயிலில் மட்டும்..
நிலைமை இப்படி இருக்க, கேரளாவில் உள்ள பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மட்டும் பிராமணர்கள் மட்டுமே தலைமை தீட்சிதர் ஆக முடியும் என்ற நிலைமை நீடித்து வருவதாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்து பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த தீட்சிதர்கள் கேரள உயர் நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுக்களில், "தேவசம் வாரியம் சார்பில் ஆண்டுதோறும் ஓர் அறிவிக்கை வெளியிடப்படுகிறது. அதில் சபரிமலை ஐயப்பன் கோயில் தலைமை தீட்சிதர் பதவியிடங்களுக்கு மலையாள பிராமணர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

"அரசியல் சாசனத்துக்கு எதிரானது"
இவ்வாறு ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை மட்டும் தலைமை தீட்சிதர் பதவிக்கு விண்ணப்பிக்க கூறுவது இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானது ஆகும். அதுமட்டுமல்லாமல், இந்திய அரசியல் சாசனம் உறுதி செய்துள்ள குடிமக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் முரணானது ஆகும். எனவே, தேவசம் வாரியத்தின் இந்த பாரபட்சமான அணுகுமுறைக்கு தடைவிதிக்க வேண்டும்" என அந்த மனுக்களில் கோரப்பட்டுள்ளது.

"சட்டப்போராட்டம் ஓயாது"
இந்த மனுக்களை அண்மையில் விசாரித்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக பதிலளிக்குமாறு தேவசம் வாரியத்துக்கும், கேரள அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மனுதாரர்களின் ஒருவரான விஷ்ணு நாராயணன் என்பவர் கூறுகையில், "ஒருவரின் செயல்களை வைத்தே அவர் பிராமணராக மாறுகிறாரே ஒழிய, பிறப்பை வைத்து எவரும் பிராமணர் ஆவது கிடையாது. கேரளாவில் உள்ள பல கோயில்களில் பிராமணர் அல்லாதவர்கள் அர்ச்சகராகவும், தீட்சிதர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால், சபரிமலை ஐயப்பன் கோயிலில் மட்டுமே தலைமை தீட்சிதர் பதவிக்கு பிராமணர் மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார்கள். இது ஜாதிய ரீதியில் இழைக்கப்படும் அநீதியாகும். இந்த நடைமுறை ஒழியும் எங்கள் சட்டப் போராட்டம் ஓயாது" என்றார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications