பரபரப்பு! கேரளாவில் கால்பந்து போட்டியின் போது சரிந்து விழுந்த பார்வையாளர் அரங்கம்.. பலர் படுகாயம்
திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ளூர் கால்பந்து போட்டிக்காக அமைக்கப்பட்ட தற்காலிக பார்வையாளர் அரங்கம் சரிந்து விழுந்ததில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பூங்கோடு பகுதியில் உள்ள எல்.பி. பள்ளி மைதானத்தில் அகில இந்திய எழுவர் கால்பந்து தொடர்போட்டி நடைபெற்று வந்தது.
இதனை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பார்வையிடுவதற்காக மைதானத்தை சுற்றிலும் தற்காலிகமான பார்வையாளர் அரங்கம் அமைக்கப்பட்டு இருந்தது.

கட்டுக்கடங்காத எண்ணிக்கையில் பார்வையாளர்கள்
இந்த நிலையில் நேற்றிரவு கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றது. பரபரப்பான கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி மின்னொளி வெளிச்சத்தில் தொடங்குவதற்கு முன்பாகவே மைதானத்தில் பார்வையாளர்கள் குழுமி இருந்தனர். கட்டுக்கடங்காத எண்ணிக்கையில் பார்வையாளர்கள் வருகை தந்ததால் பார்வையாளர் அரங்கத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. இதனால் அருகே மின்னொளி கோபுரமும் மக்களின் மீது சாய்ந்தது.

200 பேர் காயம்
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க மறுபகுதியில் அமர்ந்திருந்த பார்வையாளர்கள் ஓடிச்சென்றனர். மீட்புப் பணிகளின் முடிவில் குழந்தைகள், சிறுவர்கள் உட்பட 200 பேர் காயமடைந்ததாகவும் அதில், 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்து இருக்கின்றனர். விபத்தில் படுகாயம் அடைந்த பார்வையாளர்கள் மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மைதானத்தில் குழுமிய 8,000 பார்வையாளர்கள்
இந்த விபத்துக்கு முக்கிய காரணம், பார்வையாளர்கள் அரங்கத்தில் நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிகமான எண்ணிக்கையிலான நபர்கள் அமர்ந்ததுதான் என போலீசார் கூறுகின்றனர். நேற்றைய இறுதிப் போட்டியை காண 8,000 பேர் வரை மைதானத்தில் குழுமி இருந்ததாகவும், அவர்களில் 3,000 பேர் கிழக்கு பகுதியில் உள்ள பார்வையாளர் அரங்கில் நெரிசலுக்கு மத்தியில் அமர்ந்திருந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

போலீசார் எச்சரிக்கை
இதுகுறித்து மலப்புரம் மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் கூறுகையில், இந்த விபத்து தொடர்பாக கால்பந்து தொடரின் ஏற்பாட்டாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து உள்ளார். இதுகுறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் கூறி இருக்கிறார்.
-
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications