3.5 வயது குழந்தையின் உயிரை காப்பாற்ற.. சரியான நேரத்தில் கை கொடுத்த மனிதாபிமானிகள்! மேலும் உதவுங்கள்
திருவனந்தபுரம்: தீவிர இதய நோயால் உயிருக்கு போராடும் மூன்றரை வயது குழந்தை தீப்தியின் உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள். ஏற்கெனவே நீங்கள் செய்த பங்களிப்பு காரணமாக தீப்திக்கு சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. ஆயினும் இன்னமும் குழந்தை முற்றிலுமாக குணமடைய உங்கள் உதவி தேவைப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் டேனியல். சில ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கும் சாந்தினி என்பவருக்கும் திருமணம் நடந்தது. டேனியல் கட்டிட தொழிலாளி. வேலைக்கு சென்றால் ஒரு நாளைக்கு ரூ.800 சம்பளம் கிடைக்கும். ஆனால் ஆண்டின் எல்லா நாட்களிலும் வேலை என்பது நிச்சயம் கிடையாது.

மழை, வெயில் என எதுவும் பாராமல், சமூக பாதுகாப்பு கூட இல்லாமல் உழைத்தால்தான் இந்த சம்பளத்தை பெற முடியும். இந்த சம்பளம் போதாது என்பதால், சாந்தினி வீட்டு வேலைக்கு சென்று வந்தார். பாத்திரங்களை கழுவி, வீட்டை பெருக்கி சுத்தம் செய்வதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.

வேலையில் என்னதான் கஷ்டம் இருந்தாலும், குழந்தை தீப்தியின் முகத்த பார்க்கும்போது கஷ்டமெல்லாம் பறந்து போய்விடும். ஆனால், தீப்தி மற்ற குழந்தையை போல அவ்வளவு சுறுசுறுப்பாக இல்லை. அடிக்கடி ஏற்படும் மூச்சு திணறல், சுவாச கோளறு, சோர்வு, காய்ச்சல் என குழந்தை எப்போதும் சுருண்டே படுத்திருந்திருக்கிறது. போகாத கோயில் இல்லை.. பார்க்காத கை வைத்தியம் இல்லை. எதுவும் கைக்கொடுக்கவில்லை. கடைசியாக திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ சித்ரா மருத்துவமனைக்கு குழந்தையை பரிசோதனைக்காக பெற்றோர் அனுமதித்துள்ளனர்.

சோதனையில் குழந்தைக்கு தீவிரமான இதய பிரச்னை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை சரி செய்ய உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். தவறும் பட்சத்தில் குழந்தையின் உயிரை காப்பாற்றுவது கடினம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அறுவை சிகிச்சை, மருந்து உள்ளிட்டவற்றிற்கு ரூ.3-4 லட்சம் வரை செலவாகும் என கணிக்கப்பட்டிருக்கிறது. கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றும் பெற்றோர்களால் நிச்சயம் இவ்வளவு பெரிய தொகையை திரட்ட முடியாது. எனவே அவர்களுக்காக உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். சிறு உதவி கூட பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
-
பிரபலங்களின் இறுதி நிமிடங்களை கண்ணியமாய் மாற்றிய flying squad! ஃப்ரீசர் பாக்ஸ் வந்தது இப்படித்தான் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட்! -
சென்னையில் 6 சிட்டிங் திமுக எம்எல்ஏக்களுக்கு ‘கல்தா’.. அண்ணா நகர் முதல் வில்லிவாக்கம் வரை.. லிஸ்ட் -
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
எம்.எல்.ஏ பதவியா? மேயர் நாற்காலியா? ஆட்சிக்கு வந்ததுமே ஸ்டாலினுக்கு ‘செக்’ வைத்த ஜெயலலிதா -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி












Click it and Unblock the Notifications