3.5 வயது குழந்தையின் உயிரை காப்பாற்ற.. சரியான நேரத்தில் கை கொடுத்த மனிதாபிமானிகள்! மேலும் உதவுங்கள்
திருவனந்தபுரம்: தீவிர இதய நோயால் உயிருக்கு போராடும் மூன்றரை வயது குழந்தை தீப்தியின் உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள். ஏற்கெனவே நீங்கள் செய்த பங்களிப்பு காரணமாக தீப்திக்கு சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. ஆயினும் இன்னமும் குழந்தை முற்றிலுமாக குணமடைய உங்கள் உதவி தேவைப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் டேனியல். சில ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கும் சாந்தினி என்பவருக்கும் திருமணம் நடந்தது. டேனியல் கட்டிட தொழிலாளி. வேலைக்கு சென்றால் ஒரு நாளைக்கு ரூ.800 சம்பளம் கிடைக்கும். ஆனால் ஆண்டின் எல்லா நாட்களிலும் வேலை என்பது நிச்சயம் கிடையாது.

மழை, வெயில் என எதுவும் பாராமல், சமூக பாதுகாப்பு கூட இல்லாமல் உழைத்தால்தான் இந்த சம்பளத்தை பெற முடியும். இந்த சம்பளம் போதாது என்பதால், சாந்தினி வீட்டு வேலைக்கு சென்று வந்தார். பாத்திரங்களை கழுவி, வீட்டை பெருக்கி சுத்தம் செய்வதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.

வேலையில் என்னதான் கஷ்டம் இருந்தாலும், குழந்தை தீப்தியின் முகத்த பார்க்கும்போது கஷ்டமெல்லாம் பறந்து போய்விடும். ஆனால், தீப்தி மற்ற குழந்தையை போல அவ்வளவு சுறுசுறுப்பாக இல்லை. அடிக்கடி ஏற்படும் மூச்சு திணறல், சுவாச கோளறு, சோர்வு, காய்ச்சல் என குழந்தை எப்போதும் சுருண்டே படுத்திருந்திருக்கிறது. போகாத கோயில் இல்லை.. பார்க்காத கை வைத்தியம் இல்லை. எதுவும் கைக்கொடுக்கவில்லை. கடைசியாக திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ சித்ரா மருத்துவமனைக்கு குழந்தையை பரிசோதனைக்காக பெற்றோர் அனுமதித்துள்ளனர்.

சோதனையில் குழந்தைக்கு தீவிரமான இதய பிரச்னை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை சரி செய்ய உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். தவறும் பட்சத்தில் குழந்தையின் உயிரை காப்பாற்றுவது கடினம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அறுவை சிகிச்சை, மருந்து உள்ளிட்டவற்றிற்கு ரூ.3-4 லட்சம் வரை செலவாகும் என கணிக்கப்பட்டிருக்கிறது. கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றும் பெற்றோர்களால் நிச்சயம் இவ்வளவு பெரிய தொகையை திரட்ட முடியாது. எனவே அவர்களுக்காக உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். சிறு உதவி கூட பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications