Kerala Bus: பஸ்சில் உரசியதாக வீடியோ போட்டதால் தற்கொலை.. தலைமறைவான கேரள ரீல்ஸ் பெண்.. பெரிய சிக்கல்!
திருவனந்தபுரம்: கேரளாவில் பேருந்தில் பயணித்த போது தீபக் என்பவர் தன்னை உரசியதாக கூறி பெண் ஒருவர் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியதால் தீபக் அவமானத்தால் தற்கொலை செய்துகொண்டார். தற்போது இந்த வீடியோவை பகிர்ந்த இளம்பெண்ணுக்கு எதிராக மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசர் வழக்குப்பதிவு செய்த நிலையில், அப்பெண் தலைமறைவானதாக சொல்லப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்டு அதிக ரீல்ஸ் பெற வேண்டும் என பலரும் விரும்புகிறார்கள். இதற்காக சில விபரீத செயல்களிலும் ஈடுபடுவதை பார்க்க முடிகிறது. பட்டா கத்தியில் ரீல்ஸ் தொடங்கி அடுத்தவரை துன்புறுத்துவது வரை ரீல்ஸ் எடுப்பது தொடர் கதையாகி வருகிறது.

பஸ்சில் உரசியதால் தீபக் தற்கொலை
நமது அண்டை மாநிலமான கேரளவில் இளம்பெண் ஒருவர் எடுத்த ரீல்சால் ஒருவர் உயிரையே மாய்த்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. கேரளாவின் கோழிக்கோட்டை சேர்ந்தவர் தீபக். இவர் ஒரு தனியார் டெக்ஸ்டைல்ஸில் பணியாற்றி வந்தார். கடந்த 16 ஆம் தேதியன்று வேலைக்காக கண்ணூருக்கு பேருந்தில் சென்றுள்ளார்.
அப்போது, அவருடன் பயணித்த இளம் பெண் ஷம்ஜிதா என்பவர் வீடியோ ஒன்றை எடுத்தார். அதாவது தீபக் வேண்டும் என்றே தன் மீது உரசுவதாக குற்றம் சாட்டி இந்த வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிய நிலையில், மன உளைச்சலில் இருந்த தீபக் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது சமூக வலைத்தளங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீபக் வேண்டும் என்றே பெண்ணை உரசுவது போலத் தெரியவில்லை என்றும் தெரியாமலேயே அப்பெண் மீது கைப்பட்டது போலவே இருப்பதாகப் பலரும் பதிவிட்டு வந்தனர்.. கேரள பெண்ணின் செயலை பலரும் கண்டித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
அட்டைப் பெட்டிகளுடன் பயணம்
தீபக் உள்நோக்கத்துடன் பெண்ணை உரசுவது போலத் தெரியவில்லை. இறங்கும் போது பையை எடுக்கும் போது தெரியாமலேயே அப்பெண் மீது கைப்பட்டது போலவே இருப்பதாகப் பலரும் பதிவிட்டு வந்தனர். சில நெட்டிசன்கள் பெண்ணுக்கு ஆதரவாகவும் பதிவிட்டு வருகிறார்கள். இப்படியாக கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களை இது தொடர்பான பதிவுகள் ஆக்கிரமித்து வருகின்றன.
மற்றொரு பக்கம் இனி பேருந்தில் சென்றால், அட்டை பெட்டியை வைத்து இடைவெளியுடன் நிற்பது போலவும் பெண்கள் செல்போன் எடுத்தாலே தலைதெறிக்க ஓடுவது போலவும் வீடியோ எடுத்து கேரளாவில் பலரும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.
தலைமறைவான ரீல்ஸ் பெண்
இதற்கிடையே, தீபக் மரணம் குறித்து விசரிக்குமாறு கேரள மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. வழக்குப்பதிவு செய்து இருப்பதால் அந்த பெண்ணுக்கு இந்த விவகாரத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் அந்த பெண், தலைமறைவு ஆனதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வீடியோ எடுப்பதிலேயே ஆர்வமாக இருந்தார்
பேருந்தில் தனக்கு துன்புறுத்தல் நடப்பதாக உணர்ந்தால் உடனடியாக அதை தட்டிக்கேட்டு இருக்கலாம். ஆனால், வீடியோ எடுப்பதிலேதான் அந்த பெண் ஆர்வமாக இருந்தார் என்று சிலர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அவசரப்பட்டு அந்த பெண் மீது களங்கம் விளைவிக்க வேண்டாம் என்று மற்றொரு தரப்பினரும் வலைத்தளங்களில் காரசாரமாக விவாதித்து வருகிறார்கள்.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை












Click it and Unblock the Notifications