கொரோனா வைரஸ் இல்லாத மாவட்டமாக மாறிய இடுக்கி.. எப்படி சாத்தியம்?
திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் கொரோனா இல்லாத மாவட்டமாக இடுக்கி மாறிவிட்டது. இங்கு பாதிக்கப்பட்டிருந்த 10 பேரும் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.
Recommended Video
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9152 ஆக உள்ளது. அதுபோல் பலியானோரின் எண்ணிக்கை 302 ஆக உள்ளது. அது போல் கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 376 பேராக உயர்ந்தது.
இந்த நிலையில் இடுக்கி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆக இருந்தது. இடுக்கியின் மூணாறில் தங்கியிருந்த பிரிட்டனை சேர்ந்தவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர் எர்ணாகுளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அது போல் துபாயிலிருந்து திரும்பிய இளைஞர், காங்கிரஸ் பிரமுகருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு பிறகு குணமடைந்துவிட்டனர்.

5 பேர்
காங்கிரஸ் பிரமுகரோடு தொடர்பிலிருந்த 5 பேர், டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பிய ஒருவர், அவரது மகள் என 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து அவர்கள் இடுக்கி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி கொரோனாவிலிருந்து 4 பேர் குணமடைந்துவிட்டனர்.

இடுக்கி நிர்வாகம்
மீதமுள்ள 3 பேரும் நேற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இடுக்கி மாவட்டம் தற்போது கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது. இருப்பினும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என இடுக்கி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

தடுப்பு நடவடிக்கை
இந்தியாவில் முதன்முதலாக கேரளா மாநிலத்தவருக்குத்தான் கொரோனா பரவியது. அது போல் இந்தியாவில் கொரோனா அதிகமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் கேரளா இரண்டாவது இடத்தில் இருந்தது. ஆனால் அங்கு செய்யப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளால் தற்போது கீழே இறங்கிவிட்டது.

கொரோனா
கான்டாக்ட் டிரேசிங், ரேபிட் டெஸ்ட் கிட் ஆகியவற்றால் நோய் பாதித்தவர்கள் உடனடியாக கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கிறார்கள். அது போல் மக்களும் அரசின் உத்தரவை மீறி வெளியே வருவதில்லை. இதனால் அவர்கள் கொரோனாவிலிருந்து மீண்டு வருகிறார்கள் என்பதே நிதர்சனம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications