சேட்டன்களின் சேட்டை.. ஓணம் பண்டிகையில் மதுபானம் எவ்வளவு தெரியுமா? புதிய ரெக்கார்டு
திருவனந்தபுரம்: கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி கடந்த 10 நாட்களில் மட்டும் ரூ.826.38 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 6.38 சதவீதம் அதிகமாகும். இதுதொடர்பான புள்ளிவிவரங்கள் வெளியாகி உள்ளது.
கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ஓணம் பண்டிகை நேற்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஓணம் பண்டிகையால் கேரளா களைகட்டியது. அதேபோல் பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருக்கும் மக்களும் ஓணம் பண்டிகையை கொண்டாடினர்.

இந்நிலையில் தான் ஓணம் பண்டிகையையொட்டி கேரளாவில் கடந்த 10 நாட்களாக மதுவிற்பனை அதிகரித்தது. ஓணம் பண்டிகையையொட்டி நேற்று மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. முன்னதாகவே ஏராளமானவர்கள் தங்களுக்கு தேவையான மதுபாட்டில்களை வாங்கி வைத்து கொண்டனர்.
அதன்படி கடந்த மாதம் 28 ம்தேதி முதல் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) வரை கடந்த 10 நாளில் கேரளாவில் விற்பனையான மதுபானம் குறித்த டேட்டா வெளியாகி உள்ளது., 'பெவ்கோ' எனப்படும், கேரள மாநில பானங்கள் கழகம் நேற்று அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், ‛‛
ஓணம் பண்டிகையையொட்டி ஆகஸ்ட் 25 முதல் நேற்று முன்தினம் வரையிலான 10 நாட்களில் ரூ.826.38 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு, 6.38 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.776.82 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்தது. ஓணத்துக்கு முந்தைய நாளான உத்திராடம் நாளில் மட்டும் ரூ.137.64 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது.
இது கடந்தாண்டில், 126.01 கோடி ரூபாயாக இருந்தது. மாநிலத்திலேயே அதிகபட்சமாக கொல்லத்தின் கருணாகப்பள்ளி மதுக்கடையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.1.46 கோடிக்கு மதுபானம் விற்பனையாகி உள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications