குழந்தை பிறந்துவிட்டது.. என்ன குழந்தைனு கேட்டவர்களுக்கு கேரள திருநங்கை தம்பதியின் பதில் இதுதான்

கேரளாவில் மூன்றாம் பாலின தம்பதிக்கு குழந்தை பிறந்தது. ஆனால் என்ன குழந்தை என்பதை சொல்லவில்லை.

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் மூன்றாம் பாலின தம்பதிக்கு குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தை ஆணா பெண்ணா என்பதை அவர்கள் இன்னும் கூறவில்லை.

கேரள மாநிலம் கோழிக்கோடு நகரைச் சேர்ந்தவர் ஜியா பாவல், ஜஹாத் திருநங்கை தம்பதியான இவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் பாவல் அண்மையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை போட்டியிருந்தார்.

அதில் ஜஹாத் 8 மாத கர்ப்பமாக உள்ளார். ஒரு குழந்தைக்கு தாய், தந்தையாக வேண்டும் என்ற எங்கள் கனவு விரைவில் நிறைவேற போகிறது. திருநங்கை ஒருவர் கர்ப்பமாகி இருப்பது நாட்டிலேயே இதுதான் முதல்முறை என பதிவிட்டிருந்தார்.

திருநங்கை

திருநங்கை

இந்த நிலையில் திருநங்கை தம்பதிக்கு கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் நேற்று குழந்தை பிறந்தது. இதுகுறித்து ஜியா பாவல் நேற்று கூறுகையில், ஜஹாத்துக்கு அரசு மருத்துவமனையில் காலை 9.30 மணிக்கு அறுவை சிகிச்சை முறையில் குழந்தை பிறந்தது. குழந்தையும் ஜஹாத்தும் நலமாக உள்ளார்கள்.

என்ன குழந்தை

என்ன குழந்தை

என்ன குழந்தை என்பதை இப்போதைக்கு தெரிவிக்க விரும்பவில்லை என தெரிவித்தனர். ஜஹாத் பெண்ணாக பிறந்து ஆணாக மாறினார். ஜியா ஆணாக பிறந்து பெண்ணாக மாறியுள்ளார். ஜஹாத் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். ஜியா நடன கலைஞர். இவர்களுக்கு திருமணத்திற்கு பிறகு குழந்தை பிறக்க வேண்டும் என விரும்பினர்.

 நடைமுறை

நடைமுறை

ஆனால் இது நடைமுறையில் பல சிக்கல்கள் இருப்பதை உணர்ந்தனர். இதையடுத்த ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம் என நினைத்திருந்தனர். ஆனால் மூன்றாம் பாலினத்தவர்களாக இருப்பதால் தத்தெடுத்து வளர்ப்பதிலும் சட்ட சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இதனிடையே ஜஹாத் ஆணாக மாறி இருந்தாலும் அவரால் கருத்தரிக்க முடியும்.

குழந்தை

குழந்தை

குழந்தையை பெற்றுக் கொள்ள முடியும் என்ற செய்தியை இவர்கள் அறிந்தனர். இதையடுத்து நீண்ட யோசனைக்கு பிறகு தாங்கள் பெற்றோர் ஆகலாம் என முடிவெடுத்து ஊர் எது சொன்னாலும் பரவாயில்லை, தங்களுக்கு குழந்தை வேண்டும் என முடிவு செய்தனர். இதையடுத்து இருவரும் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோதனை செய்து கொண்டனர்.

கருவுற தயார்

கருவுற தயார்

ஜஹாத்திற்கு உடலில் எந்த பாதிப்பும் இல்லை என்பதை தெரிந்து கொண்டனர். இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகி விட்டனர். இதையடுத்து இருவரும் கருவுறுவதற்கான சிகிச்சையை தொடங்கினர். இந்த நிலையில்தான் இருவரும் கர்ப்பகால போட்டோஷூட்டை நடத்தி அதை சமூகவலைதளங்களில் பதிவிட்டனர். குழந்தை பிறந்ததும் தாய் பால் தானம் வழங்கும் வங்கியில் இருந்து பாலை பெற்று குழந்தைக்கு தரவிருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+