Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விவாகரத்து: ஓராண்டு காத்திருப்பு தேவையா? இது அரசியலமைப்புக்கு எதிரானது..கேரளா ஐகோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: ‛‛பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து கோரி வழக்கு தொடருபவர்கள் ஓராண்டு காத்திருப்பது என்பது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. திருமண பந்தத்தில் இணைந்தவர்களின் நலன் கருதி இந்தியாவில் ஒரே மாதிரியான திருமண சட்டம் கொண்டு வர வேண்டும்'' என மத்திய அரசுக்கு கேரளா உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. மேலும் குடும்ப நல நீதிமன்றத்துக்கும் அதிரடியாக உத்தரவு போட்டது.

கேரளாவை சேர்ந்த இளைஞரும், இளம் பெண்ணும் கடந்த ஜனவரி மாதம் 30ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் 2 பேரும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள். திருமணம் ஆன புதிதில் இருவரும் மகிழ்ச்சியாக இருந்தனர்.

அதன்பிறகு சிறிது நாட்களில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. திருமண வாழ்வை இணைந்து முன்னெடுக்க இருவரும் விரும்பவில்லை.

ஏற்க மறுத்த நீதிமன்றம்

ஏற்க மறுத்த நீதிமன்றம்

இதனால் திருமண பந்தத்தை முடித்து இருவரும் பிரிய முடிவு செய்து பிரிந்தனர். மேலும் இருவரும் பரஸ்பர ஒப்புதலுடன் விவாகரத்து கோர விரும்பினர். இதையடுத்து அந்த தம்பதி பரஸ்பர விவாகரத்து கோரி எர்ணாகுளம் குடும்ப நீதிமன்றத்தில் கூட்டு மனு தாக்கல் செய்தனர். மே மாதம் 31ம் தேதி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை குடும்ப நல நீதிமன்றம் ஏற்க மறுத்தது.

உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு

உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு

இந்திய விவாகரத்து சட்டம் 1869ன்படி பிரிவு 10Aயின்படி திருமணம் ஆன பின் விவாகரத்துக்காக ஒரு ஆண்டு அல்லது அதற்கு மேலாக காத்திருக்க வேண்டும் என எர்ணாகுளம் குடும்ப நல நீதிமன்றம் கூறியது. இதையடுத்து அந்த தம்பதி கேரளா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதோடு இந்திய விவகாரத்து சட்டம் 1869 பிரிவு 10 A என்பது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது எனக்கூறி தனியே ரிட் மனு தாக்கல் செய்தனர்.

நீதிமன்றம் கருத்து

நீதிமன்றம் கருத்து

இந்த மனுக்கள் நீதிபதிகள் ஏ முகமது முஸ்டாக், ேஷாபா அன்னம்மா ஈப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சில முக்கிய விஷயங்களை கூறினர். இதுதொடர்பாக நீதிபதிகள், ‛‛பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து கோர திருமணமாகி ஓராண்டு அல்லது அதற்கு மேற்பட்ட காலத்துக்கு பிறகே மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என விவாகரத்து சட்டம் 1869 பிரிவு 10 ஏ குறிப்பிடுகிறது. இது அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும், அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானதாகவும் உள்ளது.

கருத்து வேறுபாடுகளை தீர்க்கவே சட்டம்

கருத்து வேறுபாடுகளை தீர்க்கவே சட்டம்

ஏனென்றால் திருமண தகராறுகளில் நீதிமன்றத்தின் உதவியுடன் கருத்து வேறுபாடுகளை தீர்க்க சட்டம் உதவ வேண்டும். தீர்வு சாத்தியமில்லை என்றால் மனுதாரர்களுக்கு எது நல்லது என்பது பற்றி முடிவு செய்ய வேண்டும். இந்த வழக்கில் முன்வைக்கப்படும் பிரச்சனை என்னவென்றால் காத்திருப்பு காலமாக தான் உள்ளது. இது தம்பதிக்கு கஷ்டத்தை ஏற்படுத்துகிறது.

ஒரே மாதிரியா சட்டம்

ஒரே மாதிரியா சட்டம்

ஒரு மதச்சார்பற்ற நாட்டில் சட்ட உதவி என்பது மதத்தின் அடிப்படையில் இன்றி மக்களின் நலன் சார்ந்து இருக்க வேண்டும். இதனால் திருமணம் தொடர்பான பிரச்சனைகளில் துணைகளின் பொது நலனை கருத்தில் கொண்டு இந்தியாவில் ஒரே மாதிரியான திருமண சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும்'' என்றனர்.

உயர்நீதிமன்றம் உத்தரவு

உயர்நீதிமன்றம் உத்தரவு

மேலும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் குடும்ப நல நீதிமன்றத்துக்கும் அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர். அதன்படி விவாகரத்து தொடர்பான மனுவை குடும்ப நல நீதிமன்றம் விசாரித்து 2 வாரத்துக்குள் தீர்ப்பளிக்க வேண்டும் என கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+