சபரிமலை சென்ற தமிழ் குடும்பம் மீது தாக்குதல்.. வேடிக்கை பார்த்த போலீஸ்.. அதிர்ச்சி!
கேரளாவில் சபரிமலைக்குள் 40 வயது பெண் ஒருவருடன் செல்ல முயன்ற தமிழ் குடும்பம் மீது சபரிமலை போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.
Recommended Video

திருவனந்தபுரம்: கேரளாவில் சபரிமலைக்குள் 40 வயது பெண் ஒருவருடன் செல்ல முயன்ற தமிழ் குடும்பம் மீது சபரிமலை போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மாலை நடை திறக்கப்பட உள்ளது. இதனால் அங்கு போராட்டம் வலுத்து இருக்கிறது.
சபரிமலை அருகே உள்ள நிலக்கல் பகுதியில் போராட்டம் நடக்கிறது. சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் செல்வதை எதிர்த்து பெரும் போராட்டம் நடக்கிறது.

தமிழ் குடும்பம்
இந்த நிலையில் கோவிலுக்கு சென்னையில் இருந்து சென்ற தமிழ்நாட்டு தம்பதிகள் தாக்கப்பட்டு இருக்கிறார்கள். பழனி மற்றும் பஞ்சவர்ணம் தம்பதியினர் கோவிலுக்கு சென்று இருக்கிறார்கள். இதில் பஞ்சவர்ணத்திற்கு 40 வயதுதான் ஆகிறது என்பதால் அவரை வண்டியை விட்டு இறங்க சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அவர் வண்டியை விட்டு இறங்க மறுத்துள்ளார்.

தாக்கினார்கள்
இதையடுத்து அங்கு இருந்த இந்துத்துவா அமைப்பினர் அவர்கள் இருவரையும் தாக்கி இருக்கிறார்கள். கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று கூறி தாக்கி இருக்கிறார்கள். இதில் சில பெண்களும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

போலீஸ் வேடிக்கை
இந்த நிலையில் போலீஸ் அந்த சம்பவம் நடக்கும் போது, அதை வேடிக்கை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. போராட்டக்காரர்களை போலீஸ் தடுக்கவில்லை என்று தெரிவிக்கிறார்கள். போலீஸ் வேடிக்கை பார்த்த நிகழ்வு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

போலீஸ் இப்படித்தான்
இதேபோல் நேற்றில் இருந்தே போலீஸ் அங்கு பாதுகாப்பிற்கு நிற்கவில்லை என்று தகவல் வருகிறது. அங்கு போராட்டக்காரர்கள் அத்துமீறும் போது போலீஸ் அமைதி காத்துள்ளது. அதேபோல் வலுக்கட்டாயமாக பெண்கள் இறக்கிவிடப்பட்ட போதும் போலீஸ் அமைதி காத்து இருக்கிறது என்று கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications