ஷாபு வீட்டுக்கு விடியக்காலையில் வந்த விருந்தாளி, விக்கி திக்கி நின்ற குடும்பம்.. அதிரப்பள்ளி ஷாக்!
திருவனந்தபுரம்: கேரளாவில் புகழ்பெற்ற அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே வீட்டு வாசலில் அதிகாலையில் வந்து நின்ற முதலையால் வீட்டில் உள்ளவர்கள அலறி அடித்து வீட்டுக்குள் ஓடினர். விரட்ட முயன்ற போது, தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுவாக ஆற்றின் ஓரங்களில் குடியிருப்போர், பாம்பு, பூச்சி உள்ளிட்ட விலங்குகளால் ஆபத்தை அதிகம் சந்திக்கும் வாய்ப்புகள் அதிகம். அதேநேரம் எந்த நேரமும் நீரோட்டம் உள்ள ஆறுகள் என்றால் வனவிலங்குகள் தாக்கும் அபாயமும் உள்ளது.
அப்படித்தான் கேரளாவில் திருச்சூர் மாவட்டம் புகழ்பெற்ற அதிரப்பள்ளி நீர் வீழ்ச்சியில் முதலையால் வீட்டு உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சரியான நேரத்தில் வனத்துறையை அழைத்ததால் தப்பினர். அதேநேரம் ஆபத்து அவர்களை தொடர்கிறது என்பது உண்மை.

திருச்சூர்
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளியில் பிரசித்திபெற்ற நீர்வீழ்ச்சியாகும். இங்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிவார்கள். இந்த நீர் வீழ்ச்சியில் தான் பிரபல திரைப்படங்கள் பல எடுக்கப்பட்டிருக்கிறது. ‘புன்னகை மன்னன்', ராவணன், ஏய், செம்பருத்தி உட்பட பல தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நடந்துள்ளது.

விரட்ட முயற்சி
இந்த அருவியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் ஷாபு என்பவரின் வீடு உள்ளது. இந்நிலையில், நேற்று அதிகாலை வீட்டின் முன் வினோத சத்தம் ஒன்று கேட்டது. இதையடுத்து ஷாபுவின் மனைவி சாபியா கதவை திறந்து பார்த்தார். அப்போது, வீட்டு முற்றத்தில் மெகா சைஸ் முதலை இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்து பயத்தில் அலறியடித்து வீட்டுக்குள் ஓடி கணவரிடம் கூறினார். ஷாபு வெளியே வந்து முதலையை விரட்ட பார்த்திருக்கிறார்.

வீட்டுக்குள் வந்தது
ஆனால் , அது பயப்படாமல் ஷாபுவை தாக்க பாய்ந்தது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் விரைந்து வந்து முதலையை பிடிக்க முயற்சித்தனர். ஆனால், வீட்டில் வந்து சோபாவுக்கு அடியில் அது ஒளிந்து கொண்டது. வனத்துறையினர் தீப்பந்தம் கொளுத்தி காண்பித்து முதலை வெளியே வந்தது. மேலும், களைப்படைந்ததால் நகர மறுத்தது.

ஆற்றில் முதலை
இதையடுத்து, கயிறு கட்டி முதலையை பிடித்து அருவியை ஒட்டியுள்ள ஆற்றில் கொண்டு விட்டனர். முதலை வந்த இடம் சுற்றுலா பயணிகள் அதிகம் குளிக்கும் இடம் என்பதால் பரபரப்பு ஏற்பட்டது. இது ஒருபுறம் எனில் , ஷாபுவின் இரண்டரை வயது மகன் வீட்டுமுன் எப்போதும் விளையாடுவது வழக்கமாம். அதிகாலையில் முதலை வந்ததால் விபரீதம் நடக்கவில்லை.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications