போராட்டத்திற்கு நடுவே பெரு மழையும் சேர்ந்தது.. சபரிமலைக்கு செல்ல முடியாமல் தவிக்கும் பெண்கள்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

சபரிமலைக்கு செல்லும் பெண்களை காரில் இருந்து இறக்கிவிட்டு போராட்டம்- வீடியோ
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயில் செல்லும் வழியான நிலக்கல்லில் பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அங்கு கன மழையும் பெய்து வருகிறது.
சபரிமலை செல்லும் வழியில் முக்கிய சந்திப்பாக நிலக்கல் பகுதி உள்ளது. இங்குதான் பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டு வருகிறார்கள். பெண்கள் வந்த கார்கள் மீது பக்தர்கள் கல்வீசியதால் பதற்றம் நிலவுகிறது.

சில பெண்கள் பக்தர்களால் விரட்டியடிக்கப்பட்டனர். இந்த நிலையில், நிலக்கல் பகுதியில் கன மழை பெய்யத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே போராட்டத்தாலும், இப்போது கன மழையாலும், அங்கு சென்ற பெண்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்க முடியாமல், பெண்களை வருமாறு அழைப்புவிடுத்தது தவறு என்று கேரள அரசு மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications