டிட்வா புயல்! 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! யார் யாருக்கெல்லாம்?
சென்னை: டிட்வா புயல் எதிரொலியாக 8 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அது போல் 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பகுதியில் இருந்து வடமேற்காக நகர்ந்து வரும் டிட்வா புயல் டிசம்பர் 30 ஆம் தேதி அதிகாலை வடதமிழகம், புதுவை, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அருகே நிலவக் கூடும். இதன் காரணமாக டெல்டா மற்றும் அதையொட்டிய கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்சமாக மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதை அந்தந்த ஆட்சியர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அது போல் தஞ்சை, விழுப்புரம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டங்களில் ராமேஸ்வரம், ராமநாதபுரம், ஆர்.எஸ்.மங்களம், திருவாடாணை ஆகிய 4 வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications