Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செமஸ்டர் தேர்வுகள்.. இனி இந்த தேதிகளில் நடக்கும்! அண்ணா பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: புயல் கனமழை காரணமாக பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், ஒத்தி வைக்கப்பட்டிருந்த தேர்வுகள் மீண்டும் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக புதிய அட்டவணையையும் வெளியிட்டிருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின்போது சென்னையில் வெள்ளம் தேங்குவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இருப்பினும் அவ்வப்போது சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்காலிகமாக தீர்வு காணப்பட்டு வந்தது. இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் சென்னையை ஒட்டி ஆந்திரா பகுதியில் கரையை கடந்த மிக்ஜாம் புயல், சென்னைக்கு வழக்கத்தை விட 29 சதவிகிதம் கூடுதலாக மழை பொழிவை கொடுத்திருக்கிறது. எனவே சென்னை முழுவதும் வெள்ள காடாக மாறியது.

Date notification for resumption of university examinations postponed due to stormy rains

மழை நின்ற சில மணி நேரங்களில் பல இடங்களில் வெள்ளம் வடிந்தாலும், சில இடங்களில் இன்னும் வெள்ளம் வடியவில்லை. மழை நின்று இரண்டு நாட்கள் ஆன பின்னரும், இன்னும் இடுப்பளவுக்கு பல இடங்களில் வெள்ளம் தேங்கியிருக்கிறது. இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. வீடுகளில் சிக்கியுள்ளவர்களை பத்திரமாக மீட்டு முகாம்களுக்குள் மீட்பு படையினர் அனுப்பி வைத்திருக்கின்றனர். அதேபோல உணவு தேவைப்படுவோருக்கு படகில் சென்று உணவு விநியோகிக்கப்படுகிறது.

பேருந்து, ரயில், விமானம் என அனைத்து போக்குவரத்தும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது வரை சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை நீடிக்கப்பட்டிருக்கிறது. மழை காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தில் (டிசம்பர் 3, 4) நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெறவிருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

Date notification for resumption of university examinations postponed due to stormy rains

மேலும் டிச.4ம் தேதி நடைபெற இருந்த திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் தேர்வுகளும் ஒத்துவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி டிச.11ம் தேதி தொடங்கி 2024 பிப்ரவரி 17ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான புதிய அட்டவணையும் வெளியிடப்பட்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+