Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆஹா.. சூப்பராம்.. 2015யை ஒப்பிட்டு தமிழக அரசை புகழ்ந்த டைரக்டர் லிங்குசாமி! ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை வெள்ள மீட்பு நடவடிக்கை சரியான திசையில் செல்கிறது. தமிழக அரசு மாநகராட்சி பணியாளர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். இதை 2015ம் ஆண்டு வெள்ளத்தை அனுபவித்தவன் என்ற அடிப்படையில் சொல்கிறேன்'' என பாராட்டியுள்ளார் இயக்குனர் லிங்குசாமி.

வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னையை புரட்டிப்போட்டுள்ளது. இந்த புயலால் சென்னையில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Director Lingusamy praises Tamil Nadu government for its Chennai floods rescue work compared with 2015

தற்போது சென்னையில் மழை இல்லை என்றாலும் கூட மழை வெள்ளம் இன்னும் வடியவில்லை. தண்ணீரை வெளியேற்றும் பணியில் தமிழக அரசு அதிகாரிகள், சென்னை மாநகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதோடு வெள்ளப்பாதிப்பு பகுதிகளில் உள்ள மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதோடு பொதுமக்களுக்கு பெட்ஷீட், அரிசி உள்பட பல நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர தன்னார்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், தொண்டு நிறுவனத்தினர் பொதுமக்களுக்கு உணவு, பால் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தான் சென்னையில் தமிழக அரசு மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் செய்த வெள்ள மீட்பு பணியை பார்த்து திரைப்பட இயக்குனர் லிங்குசாமி பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: சென்னை மழையின் காரணமாக விமானங்கள் இயங்காததால் கடந்த 3 நாட்களாக தஞ்சாவூரில் இருந்தேன். சென்னை வெள்ளத்தை பார்த்து கவலையடைந்தேன்.

நேற்றிரவு திரும்பி வந்தபோது அடையாறில் ஒருவரை டிராப் செய்ய போனேன். விமான நிலையத்தில் இருந்து அடையாறு , வளசரவாக்கம் செல்லும் அனைத்து வழிகளிலும் தமிழக அரசு, அரசு அதிகாரிகள், சென்னை மாநகராட்சி பணியாளர்கள், தன்னார்வலர்கள் சிறப்பான பணியை செய்திருப்பதை பார்க்கவும், கேட்கவும் முடிந்தது.

2015ம் ஆண்டு வெள்ளத்தை அனுபவித்தவன் என்ற அடிப்படையில் கூற வேண்டும் என்றால் இந்த மீட்பு நடவடிக்கைகள் சரியான திசையில் முன்னேறி செல்கிறது என சொல்லலாம். இருப்பினும் நிறைய பணிகள் இன்னும் செய்ய வேண்டி யுள்ளது. தாழ்வான பகுதிகள் மற்றும் தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களில் இருந்து பலர் மீட்கப்பட வேண்டி உள்ளது. இதனால் அரசு இன்னும் இந்த பணியை விரைவுப்படுத்தி சென்னையை மீட்கும் என நம்புகிறேன். . இதற்கு என்னால் முடிந்த அளவுக்கு அதிகாரிகளுக்கு உதவ விரும்புகிறேன்'' என தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+