சென்னை, கோவை உள்பட 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்பட 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு அரபிக்கடலில் நாளை (புதன்கிழமை) வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாக உள்ளது. இதனால் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் கோவை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கோடையில் வெயில் பொதுவாக கொளுத்தும் என்ற நிலைக்கு பதிலாக பல்வேறு மாவட்டங்களில் இந்த முறை மழையால் வெயில் குறைந்து குளிராகி உள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

weather rain Chennai rains

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் அமுதா சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின்மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், மத்திய கிழக்கு அரபிக்கடலில் நாளை (புதன்கிழமை) வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும்.

இதன்காரணமாக நாளை மறுநாள் (வியாழக்கிழமை) அதே பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது. இது வடக்கு திசையில் நகர்ந்து, மேலும் வலுவடையும். இதன் காரணமாக, இன்று (செவ்வாய்க்கிழமை) கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழையும், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரையில், கேரள பகுதிகளில் வருகிற 27-ந்தேதி தொடங்கும். கோடை மழையை பொறுத்தவரையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் 192.7 மீட்டர், இயல்பு நிலை 101.4 மி.மீட்டர் சராசரி நிலையை விட 90 சதவீதம் அதிகம் ஆகும்.

தமிழ்நாட்டில் மார்ச் 1ஆம் தேதி முதல் தற்போது வரை இயல்பைவிட 90% அதிக மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 345% இயல்பைவிட அதிக மழை பெய்திருக்கிறது. கள்ளக்குறிச்சியில் இயல்பான மழை அளவு 6 செ.மீ. என்ற நிலையில் 28 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. சென்னையில் இயல்பைவிட 83% அதிக மழை பதிவாகியுள்ளது" இவ்வாறு கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+