இனி 4 வழிப்பாதை எல்லாம் செட்டாகாது.. சிட்டிக்கு நடுவே வரும் மிகப்பெரிய 6 வழி சாலை.. பணிகள் ஆரம்பம்
சென்னை: சென்னையில் சர்தார் படேல் சாலையில் இருந்த நடைபாதை அளவு குறைக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து இங்கே சர்தார் படேல் சாலையை அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
சென்னை சர்தார் படேல் சாலையை அகலப்படுத்தும் திட்டத்திற்காக மாநில நெடுஞ்சாலைத் துறை விரைவில் டெண்டர்களை வெளியிட உள்ளது. தற்போதைக்கு அங்கே நடைமேடை மட்டும் அளவு சிறுதாக்கப்பட்டு உள்ளது. பல லட்சம் ஊழியர்கள் பயணம் செய்யும் இச்சாலையின் மேம்பாட்டிற்கு ₹45 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இரு கூடுதல் பாதைகள் அமைத்தல், பாதசாரிகளுக்கான நடைபாதைகளை மேம்படுத்துதல், மற்றும் ஐஐடிக்கு அருகிலுள்ள புற்றுநோய் மையத்தைச் சுற்றி ஒலி தடுப்புச் சுவர் கட்டுதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும்.
சர்தார் படேல் சாலை
இச்சாலை, ஆறு வழித்தடங்களைக் கொண்ட ஐடி காரிடர் மற்றும் அண்ணா சாலை ஆகிய இரு முக்கிய சாலைகளை இணைக்கிறது. "கல்வி நிறுவனங்கள் மற்றும் நினைவிடங்கள் நிறைந்த இச்சாலை, அதன் அகலத்தை தக்கவைத்துக் கொள்வது அவசியம். மத்திய கைலாஷ் சந்திப்பில் மேம்பாலம் கட்டப்பட்டதால், அதன் கீழ் உள்ள சாலை சுமார் 400 மீட்டர் தூரத்திற்கு ஏற்கனவே அகலப்படுத்தப்பட்டுள்ளது," என ஓர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஐஐடி மெட்ராஸ் முதல் அண்ணா சாலை வரையிலான பகுதி விரிவுபடுத்தப்பட்டு, அதிக வாகனங்களைச் செல்ல அனுமதிக்கும் என்று அவர் மேலும் கூறினார். இத்திட்டப்பணிகள் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும். முதல் கட்டமாக, ஐஐடி மெட்ராஸ் முதல் ராஜ்பவன் வரையிலான 1.70 கி.மீ தூரப் பணிகள் தொடங்கும்.
அதைத் தொடர்ந்து, ராஜ்பவன் முதல் அண்ணா சாலை வரையிலான 0.80 கி.மீ தூரம் கொண்ட இரண்டாம் கட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும். சில மாதங்களுக்கு முன்பு, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, மேம்பால ஆய்வுக்குப் பிறகு சாலையின் அகலத்தை நேரில் ஆய்வு செய்திருந்தார்.
காந்தி மண்டபம் அருகே உள்ள அகலமான நடைபாதைகள் நினைவிடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வரும் பாதசாரிகளுக்கு வசதியாக உள்ளன. ஆனால், மருத்துவமனை மற்றும் ஐஐடி மெட்ராஸ் அருகிலுள்ள நடைபாதைகளை அகலப்படுத்த வேண்டியது அவசியம் என அரசு கருதுகிறது. அவை குறுகலாக இருப்பதால், பாதசாரிகள் சாலையில் நடப்பதைத் தவிர்க்க முடியவில்லை.
ஆறு வழித்தடங்களைக் கொண்ட ஐடி காரிடர்
நோயாளிகளும் அவர்களது உதவியாளர்களும் போக்குவரத்து நிறைந்த சாலையில் நடப்பதைத் தவிர்க்க, அந்தப் பகுதியில் நடைபாதை அகலப்படுத்தப்படுவது அவசியமாகும். தற்போது அங்கே நடைமேடை அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. கேன்சர் மருத்துவமனை பகுதியும் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இதற்கிடையே, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக, கிண்டி முதல் வேளச்சேரி வரையில் குருநானக் கல்லூரி சந்திப்பில் ₹310 கோடி மதிப்பில் 3 கிலோமீட்டர் நீள மேம்பாலம் கட்டப்படவுள்ளது. இத்திட்டத்தை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளன.
சென்னை மாநகராட்சி தகவல்
சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தரும் தகவலின்படி, குருநானக் கல்லூரி சந்திப்பு (ஃபீனிக்ஸ் மால் சந்திப்பு) மற்றும் ஃபைவ் ஃபர்லாங் சாலை சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. ஆய்வின்படி, ஃபைவ் ஃபர்லாங் சாலை சந்திப்பில் ஒரு மணி நேரத்திற்கு 7,459 பயணிகள் கார்களும், குருநானக் கல்லூரி சந்திப்பில் ஒரு மணி நேரத்திற்கு 7,742 பயணிகள் கார்களும் பயணிக்கின்றன. ஏறத்தாழ 7 லட்சம் மக்கள் இப்பகுதியில் தினசரி பயணிக்கின்றனர்.
@evvelu and @CMOTamilnadu stole footpath & cycle lane from the poor pedestrians & gave it to the rich car drivers extending carriageway, charging us 45 crores for it
— Reclaim Chennai streets (@reclaimchennai) November 11, 2025
This is how our footpath & cycling infra are systematically robbed
Is this social justice?!
📍Sardar Patel road pic.twitter.com/OHr4861Kam
இந்த நெரிசலைக் குறைக்க ஒரு மேம்பாலம் அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது என்று ஓர் அதிகாரி தெரிவித்தார். பெருநகர சென்னை மாநகராட்சியின் பாலங்கள் துறையின் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த இரண்டு வழிப்பாதை மற்றும் 12 மீட்டர் அகல மேம்பாலம், வேளச்சேரி பிரதான சாலையில் சர்தார் படேல் சந்திப்பிற்குப் பின் தொடங்கி, வேளச்சேரியில் உள்ள ஃபீனிக்ஸ் மாலுக்கு அப்பால் நீளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
பிழைப்பு தேடி தமிழ்நாடு வந்த சிறுவன்..காலி ரயில் பெட்டியில் சீரழித்த கயவர்கள்! துடித்து பலியான சோகம்! -
எல்லா SP-க்களும் சென்னை நோக்கி.. தலைநகரில் 8 பேருக்கு புதுபொறுப்பு! வெயிட்டிங் லிஸ்ட்க்கு குட்பை -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
பிரபலங்களின் இறுதி நிமிடங்களை கண்ணியமாய் மாற்றிய flying squad! ஃப்ரீசர் பாக்ஸ் வந்தது இப்படித்தான் -
சிவரஞ்சனியை போட்டு தள்ளிட்டேன், மகளையும் முடிச்சுட்டேன்!" காலங்காத்தாலேயே அம்மாவுக்கு போன் செய்த மகன் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட்!











Click it and Unblock the Notifications