கோவை மாநகரில் என்ன நடக்குது.. பதில் சொல்லுங்க ஸ்டாலின்.. பொங்கிய வானதி சீனிவாசன்
கோவை: கோவை கல்லூரி மாணவி 3 இளைஞர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரின் நண்பரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதே கோவையில் நடைபெற்ற மற்றொரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருகூர் அருகே ஒரு பெண் அலறல் சத்தத்துடன் காரில் கடத்தப்பட்டதாக வீடியோ வெளியாகியிருந்தது. இதுகுறித்து வானதி சீனிவாசன், கோவையில் என்ன நடக்கிறது. கோவையில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் சம்பவங்களுக்கு யார் காரணம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை இருகூர் ஏஜி புதூர் அருகே நேற்று மாலை ஒரு பெண் காரில் கடத்தி செல்லப்பட்டதாக தகவல் வெளியானது. பெண் அலறல் சத்தத்துடன் காரில் செல்லும் பதைபதைக்கும் சிசிவிடி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது குடும்பப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா அல்லது கடத்தப்பட்டாரா என்பதை கண்டறிய காவல்துறை 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.

இருகூர் பெண் கடத்தலா
இந்த சம்பவம் கோவையில் பெரும் பதற்றத்தையும், பதைபதைப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கோவை விமான நிலையம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அந்த பிரச்சனை ஓய்வதற்குள் இந்த சம்பவம் நடந்திருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பெண்களுக்கு எதிராக நடைபெறும் இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இதுகுறித்து பாஜக மகளிரணி தேசிய தலைவரும், கோவை தெற்கு எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "என்ன நடக்கிறது கோவை மாநகரில் கோவை இருகூரில் பரபரப்பான சாலை ஒன்றில் பெண் ஒருவர் கடத்தப்படும் அதிர்ச்சி காணொளி மனதை பதைபதைக்க செய்கிறது. ஐந்து நாட்களுக்கு முன் விமான நிலையம் அருகில் ஒரு கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.
யார் பொறுப்பு
அந்த கொடூரத்தின் ரணம் ஆறும் முன்னரே மீண்டுமொரு பெண் கடும் அலறல் சத்தத்துடன் கடத்தப்படுகிறார். ஒரு அரசியல் தலைவர் என்பதைத் தாண்டி, கோவையிலேயே பிறந்து வளர்ந்து, வாழ்ந்து வரும் ஒரு மண்ணின் மகளாக மனதில் பல சந்தேகங்களும் கேள்விகளும் தோன்றுகின்றன. கல்வியிலும் தொழிலிலும் சிறந்து விளங்க வேண்டிய கோவை இப்படி பெண்களுக்கு எதிரான குற்றங்களின் கூடாரமாக மாறியது எப்படி.
பேச்சிலேயே பாசத்தையும் மரியாதையையும் வெளிப்படுத்தும் மண் இன்று பெண்களின் மரியாதையையும் பாதுகாப்பையும் பறிக்கும் மண்ணாய் மாறியது எப்படி. ஒருவேளை பெருகிவரும் போதைப்பொருளா? அல்லது திக்கெட்டும் இருக்கும் டாஸ்மாக்கா? அல்லது பயமின்றி உலவும் குற்றவாளிகளா? அல்லது ஏவல்துறையாக மாறிய காவல்துறையா? அல்லது இதையெல்லாம் முறையாக நிர்வகிக்க தவறிய முதல்வர் மு.க. ஸ்டாலினா.
காரணம் எதுவாயினும், சட்டம் ஒழுங்கை சீரழித்து வேடிக்கை பார்த்து என் தாய்மண்ணில் தமிழக மகளிருக்கு பாதுகாப்பு இல்லாமல் தவிக்கவிட்ட பாவம் திமுக அரசை சும்மா விடாது. நிச்சயமாக, கூடிய விரைவில், இதற்கெல்லாம் மக்கள் மன்றத்தில் திமுக அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்." என்று கூறியுள்ளார்.
-
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான்












Click it and Unblock the Notifications