Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காங்கிரஸின் 3 கோரிக்கைகள்.. விஜய்யை பாராட்டி மீண்டும் திமுகவை சீண்டிய பிரவீன் சக்கரவர்த்தி

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழ்நாடு அரசியல் கட்சிகள் 2026 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். கூட்டணி பேச்சுவார்த்தை, வாக்குவாதங்கள் ஆகியவற்றால் தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கிவிட்டது. திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் வரத்தொடங்கியுள்ளன. பிரவீன் சக்கரவர்த்தி தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து பேசியிருந்தது சர்ச்சையாகியிருந்தது. இதுகுறித்து காலை பிரவீன் சக்கரவர்த்தி விளக்கமளித்திருந்தார். இந்நிலையில் பிரவீன் சக்கரவர்த்தி ஊட்டிவிட்ட கையை கிள்ளி விடலாமா என்று திமுகவை விமர்சித்த அவர்.. விஜய் அரசியல் சக்தியாக மாறிவிட்டார் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி கோவை வந்தார். அப்போது தனியார் ஹோட்டலில் பிரவீன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது காங்கிரஸ் எதிர்காலத்திற்காக வைக்கப்படும் கோரிக்கை. 60 வருடங்களாக காங்கிரஸ் பலவீனமாகவே இருக்கிறது. காங்கிரஸ் கட்சியை தற்போது பலப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.

Praveen Chakaravarty Vijay

காங்கிரஸின் 3 கோரிக்கைகள்

காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 60 வருடங்களாக ஆட்சியில் இல்லை. அதிக சீட், ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு ஆகிய 3 முக்கிய கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. என்பது காங்கிரஸ் தொண்டர்கள் கோரிக்கை. சில எம்எல்ஏ, எம்பி ஆகியோருக்கு தனிப்பட்ட காரணங்கள் இருக்கலாம். ஊட்டி விடும் கையை யாராவது கிள்ளுவார்களா.

ஊட்டிவிடும் கையை கிள்ள வேண்டாம் என்பதுதான் எம்பி, எம்எல்ஏக்களின் கருத்து. காங்கிரஸ் கட்சி தொண்டருக்கு இது தேவையா.. இல்லையா என்பதை பார்க்க வேண்டும். காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த இது தேவையா.. இல்லையா என்பதை யோசிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் எதிர்கால நலனுக்கு இது தேவையா.. இல்லையா.

விஜய் - பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு

காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. காங்கிரஸ் கட்சி ஒரு ஜனநாயக ரீதியான கட்சி. இங்கு காங்கிரஸ் தொண்டர்கள் அவர்கள் கோரிக்கையை வைக்கலாம். ஆனால் கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சி தலைமை தான் இறுதி முடிவு எடுக்கும்" என்று கூறினார்.

அப்போது தவெக தலைவர் விஜய்யை சந்தித்தது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பிரவீன் சக்கரவர்த்தி, "விஜய்யை சந்திப்பதில் தவறு என்ன. விஜய்யை சந்தித்து பேசினேன். அவ்வளவுதான். தமிழ்நாட்டில் இரண்டு பேர் சந்தித்து பேசக் கூடாதா. பிரவீன் சக்கரவர்த்திக்கு நிறைய அடையாளங்கள் இருக்கின்றன. விஜய்யை நான் தனிப்பட்ட முறையில் சந்தித்தேன்.

விஜய் அரசியல் சக்தியாக மாறிவிட்டார்

இதே போல டெல்லியில் நான் நிறைய பேரை சந்திக்கிறேன். தமிழகத்தில் தான் தனிப்பட்ட சந்திப்பை இப்படி கேள்வி கேட்கிறார்கள். தமிழக வெற்றிக் கழகம் குறித்து கருத்துக்கணிப்புகள் இப்போது தேவையில்லை. விஜய் கூட்டத்திற்கு மக்கள் உற்சாகமாக வருகின்றனர் என்பது வெளிப்படையாக தெரிகிறது. அதை ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும்.

அது வாக்காக மாறுமா.. மாறாதா.. என்று கேள்வியையும் வைக்கிறார்கள். விஜய்யை மக்கள் நடிகராக பார்க்க வரவில்லை. அவரை ஒரு அரசியல்வாதியாக பார்க்கத்தான் வருகின்றனர். அதை யாராலும் மறுக்க முடியாது. களம் வெளிப்படையாக தெரிகிறது. விஜய் ஒரு அரசியல் சக்தியாக உருவாகிவிட்டார். விஜய்யுடன் என்ன பேசினேன் என்பதை இப்போது சொல்ல முடியாது" என்றார்.

இறுதியாக அவரிடம் தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடலாமே என்று நாம் தமிழர் சீமான் சொன்னது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பிரவீன், "யார் எப்படி வேண்டுமானாலும் பேசட்டும், அதற்கு பதில் சொல்ல தேவையில்லை" என்று பதில் அளித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+