ஆதாரே ஆதாரம்.. 3 மாநிலங்களில் மதிய உணவு திட்டத்தில் 4.4 லட்சம் போலி மாணவர்கள்! ஷாக் ரிப்போர்ட்
மதிய உணவு திட்டத்தில் 4.4 லட்சம் மாணவர்கள் பயனடைவதாக போலி கணக்கு காட்டியது ஆதார் எண்ணை கட்டாயப்படுத்தியதால் அம்பலமானதாக தகவல்கள் வெளியாகின்றனர்.
டெல்லி: பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தில் 4.4 லட்சம் மாணவர்கள் பயனடைந்ததாக போலியாக கணக்கு காண்பிக்கப்பட்டது ஆதார் எண்ணை கட்டாயப்படுத்தியதன் மூலம் தெரியவந்துள்ளது.
நாடுமுழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக மதிய உணவு அளிக்கப்படுகிறது.
இதில் சுமார் 10 கோடி மாணவர்கள் பயன்பெறுகின்றனர். இதற்காக மத்திய அரசு பலகோடிகளை ஆண்டுதோறும் ஒதுக்கி வருகிறது.

ஆதார் கட்டாயம்
மதிய உணவு திட்டத்தில் பயன்பெறும் குழந்தைகள் தங்கள் ஆதார் எண்ணை வரும் ஜூன் மாதம் 30-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளி அலுவலரிடம் கட்டாயம் அளிக்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இது நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு கட்சிகள் கண்டன கணைகளை தொடுத்தனர்.

வெளிப்படைத் தன்மை
ஆதார் எண்ணை கட்டாயமாக்கினால்தான் அதில் உள்ள முறைகேடுகளை வேரறுக்க முடியும். இந்த திட்டத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக மத்திய அரசு விளக்கம் அளித்தது.

3 மாநிலங்களில்...
மத்திய அரசின் உத்தரவை அடுத்து ஜார்கண்ட், மணிப்பூர், ஆந்திரா ஆகிய மூன்று மாநிலங்களில் மதிய உணவு உட்கொள்ளாத மாணவர்களையும் சேர்த்து 4.4 லட்சம் மாணவர்களின் பெயர்கள் கொண்ட போலி பட்டியலை தயார் செய்து ஆண்டுதோறும் அதிகாரிகள் அரசுக்கு அனுப்பி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் அரசுக்கு கணிசமான தொகை மிச்சமாகும்.

நாடு முழுவதும்..
வெறும் 3 மாநிலங்களில் ஆதார் எண் இணைக்காத திட்டத்தில பயன்பெறாத 4.4 லட்சம் மாணவர்கள் இருக்கும் போது நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் போலியான மாணவர்கள் கண்டறிப்படால் மத்திய அரசுக்கு ஏராளமான தொகை மிச்சமாகும்.
கேஸ் சிலிண்டருடன் ஆதார் எண்ணெய் இணைத்ததால் போலி இணைப்புகள் மூலம் அரசுக்கு அதிகஅளவிலான மானியத் தொகை மிச்சமானது குறிப்பிடத்தக்கது.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications