மூளையை தூண்டிவிட்டு, கிதார் வாசிக்க வைத்து இளைஞரின் நரம்பு குறைப்பாட்டை சரி செய்த டாக்டர்கள்!
பெங்களூர்: எந்த நரம்பில் கோளாறு உள்ளது என்பதை கண்டறிய மூளையில் உள்ள செல்களை தூண்டி அதன் மூலம் இளைஞரை கிதார் வாசிக்க வைத்து அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் செய்துள்ளனர்.
பெங்களூரைச் சேர்ந்தவர் கிஷோர் (32) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கிதார் கலைஞர். கிதாரை அதிகப்படியாக வாசித்ததால் அவரது இடது கையில் மூன்று விரல்கள் நரம்பியல் குறைப்பாட்டால் செயலிழந்தன.

இதைத் தொடர்ந்து அவர் கடந்த வாரம் பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளையில் 7 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆபத்தான அறுவை சிகிச்சை குறித்து மருத்துவர்கள் கூறுகையில், கிஷோருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்னர், அவரது தலையில் 4 ஸ்குருக்களை கொண்ட ஒரு சட்டத்தை பொருத்தினோம். அதைத் தொடர்ந்து எம்ஆர்ஐ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
எனினும் எந்த நரம்பில் பிரச்சினை என்பதை கண்டறிய அவரது மண்டை ஓட்டில் மயக்க மருந்து செலுத்தி 14மிமீ அளவுக்கு துளை போடப்பட்டது. இதைத் தொடர்ந்து சிறப்பு வாய்ந்த கரன்ட் ஷாக் மூலம் அவரது மூளை செல்கள் தூண்டிவிடப்பட்டன.
பின்னர் அவரை கிதார் வாசிக்க வைத்து அதன் மூலம் எந்த நரம்பில் குறைபாடு உள்ளது என்பது குறித்த சரியான இடத்தை கண்டறிய முடிந்தது. இந்த அறுவை சிகிச்சை சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட கிஷோர் கூறுகையில், நான் தற்போது நலமாக உள்ளேன். செயலிழந்து கிடந்த எனது விரல்கள் மீண்டும் கிதாரை வாசிப்பதை பார்க்கும் போது வியப்பாக உள்ளது. இந்த அறுவை சிகிச்சையால் நான் 100 சதவீதம் குணமடைந்துள்ளேன்.
முன்புபோல் என்னால் எனது விரல்களை இயக்க முடிகிறது. இன்னும் 3 நாட்களில் நான் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு திரும்பி மீண்டும் கிதாரை வாசிப்பேன் என்றார் கிஷோர்.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல்












Click it and Unblock the Notifications