காவிரி மேலாண்மை வாரியம், முல்லைப் பெரியாறு 152 அடி... மோடியிடம் ஜெ. வைத்த 29 கோரிக்கைகள்
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 29 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை மனு அளித்துள்ளார்.
இன்று காலை 11 மணிக்கு சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட அவர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்குச் சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மாலை 5 மணியளவில் பிரதமரை நேரில் சந்தித்த அவர் தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும்.

நதி நீர் இணைப்பை நடைமுறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 29 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமரிடம் மனு அளித்தார்.
பிரதமர் மோடி- ஜெயலலிதா சந்திப்பு சுமார் 50 நிமிடங்கள் நீடித்தது. மோடியிடம் ஜெயலலிதா அளித்த கோரிக்கை மனுவின் முக்கிய அம்சங்கள்:
•காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்
•சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும்
•முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும்
•மேகதாதுவில் தடுப்பணை கட்டுவதை தடுக்க வேண்டும்
•தமிழக அரசு பரிந்துரைத்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும்
•ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
•நிலுவையில் உள்ள மெட்ரோ ரயில் திட்டப்பணிகளை விரைவுபடுத்த வேண்டும்
•மாநில அரசு பரிந்துரைத்த இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும்.
•மருத்துவ பொது நுழைவுத்தேர்வில் அமல்படுத்த மாநில அரசை கட்டாயப்படுத்தக்கூடாது. தமிழகத்திற்கு நிரந்தர விதி விலக்கு தேவை
•21 மீனவர்களையும், 92 படகுகளைகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
• தமிழக கேபிள் டிவிக்கு டிஜிட்டல் உரிமம் வழங்க வேண்டும்.
• தமிழகத்திற்கான உணவு தானிய ஒதுக்கீட்டை குறைக்க கூடாது
• இலங்கை வசம் உள்ள கச்சத்தீவை மீட்க வேண்டும்
• மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தேவையான நிதியை விடுவிக்க வேண்டும்
•கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் கோவிலை புதுப்பிக்க வேண்டும்
•தமிழகத்திற்கான மண்ணெண்ணை ஒதுக்கீட்டை குறைக்கக் கூடாது
•தமிழகத்தில் பாயும் நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
•மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்
•தேசிய பேரிடர் நிதியில் இருந்து தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்
•அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை செயல்படுத்த வேண்டும்
•கூடங்குளம் 2வது அலகில் மின் உற்பத்தியை தொடங்க வேண்டும்.
•இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை அளிக்க வேண்டும்
•கெயில் நிறுவனம் அமைக்க உள்ள எரிவாயு குழாய் பாதையை மாற்றி அமைக்க வேண்டும்
• 25,912 கோரி தேசிய பேரிடர் நிதியிலிருந்து பெற 2 மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் 1735 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. வெள்ளநிவாரணம், புணரமைப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
-
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்!











Click it and Unblock the Notifications