1 ரூபாய் சம்பளம் வாங்கியதால் ஜெயலலிதா ஒரு அரசு ஊழியரே.. கர்நாடக ஹைகோர்ட் நீதிபதி திட்டவட்டம்
பெங்களூரு: ரூ.1 சம்பளம் வாங்கிய தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 66 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் சேர்த்தது எப்படி என்பது குறித்து வாதத்தை முன்வைக்குமாறு, கர்நாடக ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா வழக்கறிஞருக்கு அறிவுறுத்தினார்.
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை கர்நாடக ஹைகோர்ட்டில் நீதிபதி குமாரசாமி தலைமையிலான பெஞ்ச் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், மீண்டும், ஜெயலலிதா சார்பில் வழக்கறிஞர் குமார் வாதிடுகிறார். வழக்கு விசாரணையின் 28வது நாளான இன்று குமார்வாதிடுகையில், இது அரசியல் காரணங்களால் தொடரப்பட்ட வழக்கு என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி குமாரசாமி "இவ்வாறு பொதுவாக ஒரு வாதத்தை முன்வைக்காதீர்கள் என்று பலமுறை உங்களிடம் கூறிவிட்டேன். அரசியல் சார்பான ஒரு குற்றச்சாட்டு என்றால் வழக்கு எப்படி 18 வருடங்கள் நடந்திருக்க முடியும்? அப்படியே நீங்கள் கூறுவது உண்மைதான் என்றாலும், அதற்கான ஆதாரத்தையாவது முன்வையுங்கள்.
மேலும், ஜெயலலிதா ரூ.1 சம்பளம் பெற்று முதல்வராக பணியாற்றியுள்ளதாக கூறியுள்ளீர்கள். அப்படியிருக்கும்போது, ரூ.66 கோடி சொத்துக்களை எப்படி சம்பாதித்தார், அதற்கான ஆதாரங்கள் என்ன என்பது குறித்து வாதத்தை முன்வையுங்கள். ஜெயலலிதா சம்பளமே வாங்காமல் பணியாற்றினால் அது வேறு. ஆனால் ஜெயலலிதா 1 ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதால் அவர் அரசு ஊழியராகவே கருதப்படுவார். எனவே அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளின்போது, அரசு ஊழியர் ஒருவர் வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்ததாகவே பார்க்க வேண்டிவரும்" என்று நீதிபதி கூறினார். இதைத் தொடர்ந்து வாதம் நடந்தது.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications