சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ. தரப்பு வக்கீல் மாற்றம்! மூத்த வழக்கறிஞர் நாகேஷ்வர ராவ் ஆஜர்
பெங்களூரு: கர்நாடக ஹைகோர்ட்டில் நடந்து வரும் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சார்பில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் நாகேஷ்வரராவ் ஆஜராகி வாதிட தொடங்கியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நால்வரையும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது. இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடந்து வருகிறது.

கடந்த 5ம் தேதி தொடங்கிய விசாரணை தொடர்ந்து தினமும் நடை பெறுகிறது. இதுவரை ஜெயலலிதா தரப்பில், வக்கீல் குமார் மேல் முறையீட்டு மனு குறித்து வாதாடி வந்தார். இந்நிலையில் இன்று காலை, நீதிபதி குமாரசாமி முன்னிலையில், 6வது நாளாக வாதம் தொடங்கியது. ஆனால் ஜெயலலிதா தரப்பில் குமாருக்கு பதிலாக, நாகேஷ்வரராவ் ஆஜராகினார்.
உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான நாகேஷ்வரராவ், இந்த வழக்கில் முதல்முறையாக ஆஜராக தொடங்கியுள்ளார். குமாரின் வாதத்தைவிட நாகேஷ்வரராவ் சிறப்பான வாதத்தை முன்னெடுத்து வைப்பார் என்ற நம்பிக்கையில் ஜெயலலிதா தரப்பு அவரை வரவழைத்துள்ளது.
நாகேஷ்வரராவ் இன்று வாதிடுகையில் "ஜெயலலிதா தனது வருமானத்துக்கு இதுவரை சரியாக கணக்கு காட்டி வரி செலுத்தி வருகிறார். வருமான வரி செலுத்தியதற்கான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆனால் கீழ் கோர்ட்டில் வருமான வரி தாக்கல் செய்தது தொடர்பான ஆவணங்கள் முறையாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இது முக்கியமாக கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியதாகும்" என்று வாதாடினார்.
இந்த வழக்கில், வழக்கம்போல, அரசு தரப்பில், பவானி சிங் ஆஜர் ஆனார். இவரை அரசு வக்கீல் பதவியில் இருந்து நீக்கிவிட்டு வேறு வக்கீலை நியமிக்க வேண்டும் என்று அன்பழகன் சார்பில் கர்நாடக அரசுக்கும், கர்நாடக ஹைகோர்ட் தலைமை நீதிபதிக்கும் கடிதம் எழுதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications