டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக ராஜேஷ் கோபிநாதன் நியமனம்
டெல்லி: இந்தியாவின் பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக ராஜேஷ் கோபிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பையில் டாடா குழுமத்தின் நிர்வாக குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டாடா நிறுவனதலைவர் ரத்தன் டாடா உட்பட 5 பேர் கொண்ட குழு டாடா சன்ஸ் தலைவராக நடராஜன் சந்திரசேகரன் நியமிக்கப்படுவதாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக ராஜேஷ் கோபிநாதன் நியமனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக ராஜேஷ் கோபிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். 1971ம் ஆண்டு பிறந்த இவர், திருச்சி மண்டல பொறியியல் கல்லூரியில் (தற்போது என்ஐடி) எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங்கும், ஐஐஎம் ஆமதாபாதில் நிர்வாகப்படிப்பு முடித்தார்.
ராஜேஷ் கோபிநாதன், டிசிஎஸ் நிறுவனத்தில் 2001ம் ஆண்டு சேர்ந்தார். 2013 பிப்ரவரியில் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் பிபிஓ பிஸினஸ், இந்தியா பிஸினஸ் பகுதி மற்றும் வங்கி சாப்ட்வேர் ஆகிய பிரிவுகளைக் கவனித்து வந்தார். சிஎப்ஓ-வாக நியமிக்கப்படுவதற்கு முன்பு பிஸினஸ் பைனான்ஸ் பிரிவின் துணைத்தலைவராக இருந்தார்.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல்












Click it and Unblock the Notifications