தலைக்கு ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்ட லஷ்கர் தீவிரவாதி சுட்டுக்கொலை... ஊடுருவல் முயற்சி முறியடிப்பு
ஜம்மு : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பதுங்கியிருந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த முக்கிய தீவிரவாதியை, பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தின் ககாபுரா பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவ முயல்வதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படியில், அப்பகுதிக்குச் சென்ற பாதுகாப்பு படையினர், பேகம்பாக் என்ற கிராமத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை சுற்றி வளைத்துப் பிடிக்க முயற்சி செய்தனர்.
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. ஒரு கட்டத்தில், பாதுகாப்புப் படையினரின் தாக்குதலை சமாளிக்க முடியாமல், தீவிரவாதிகள் பின்வாங்கினர். எனினும், பாதுகாப்பு படையினர் தொடர்ந்து நடத்திய தாக்குதலில், லஷ்கர் அமைப்பின் முக்கிய தளபதியான இர்ஷத் கனி என்ற தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.
இவன், கடந்த 2013 ஆம் ஆண்டு ஹைதர்போரா பகுதியில் ராணுவ கான்வாய் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கிய பங்காற்றியவன் என்பது குறிப்பிடத்தக்கது.
இவனைப் பற்றி தகவல் தருபவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications