காஷ்மீர் பிரிந்து செல்வது குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டுமாம்... சொல்வது நவாஸ் ஷெரீப்
இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீர் மக்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்து பிரிந்து சென்று தனிநாடாவது குறித்து பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வலியுறுத்தியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 2 வாரங்களாக வன்முறை வெடித்து 40க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் காஷ்மீர் தனிநாடு பிரிவினைவாதிகள், ஐ.நா. சபையிடம் உறுதியளித்தபடி காஷ்மீர் மக்களிடம் பிரிந்து செல்வதற்கான பொதுவாக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் மத்திய அரசு இதை நிராகரித்து விட்டது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், காஷ்மீர் பிரச்சினையில் பொது வாக்கெடுப்பு நடத்த தேவையில்லை. அது வழக்கொழிந்து விட்ட அம்சம். காஷ்மீர் மக்கள் தவறாக வழிநடத்தப்படுவதே பிரச்சினைக்கு காரணம். அவர்கள் நமது சொந்த மக்கள். அவர்களை நாம் சரியான பாதைக்கு கொண்டு வருவோம். உண்மையை புரிய வைப்போம் எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் காஷ்மீர் வன்முறைகளைக் கண்டித்து பாகிஸ்தான் அரசாங்கம் கருப்பு தினத்தை இன்று அனுசரித்தது. இதையொட்டி அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் வெளியிட்ட அறிக்கையில், காஷ்மீரிகளின் சுய நிர்ணய உரிமையை இந்தியா அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், காஷ்மீர் மக்களுடன் நாங்கள் இருக்கிறோம் என்பதை உணர்த்துவதற்காக நாம் இன்று கருப்பு தினத்தை கடைபிடித்து வருகிறோம். இதன்மூலம் தங்களது உரிமைகளுக்காக போராடும் காஷ்மீரிகளுடன் நாங்கள் துணையாக இருக்கிறோம் என்ற வலிமையான செய்தியை உலகுக்கு நாங்கள் உணர்த்துகிறோம்.
காஷ்மீர் மக்களின் விடுதலைக்கான உரிமைக்குரலை இந்தியாவால் ஒடுக்க முடியாது. அவர்கள் விடுதலை அடைந்தே தீருவார்கள். காஷ்மீரை பிரச்சனைக்குரிய பகுதியாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. எனவே, அங்கு வாழும் மக்களின் உரிமைகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் அவர்களின் முடிவு என்ன என்பதை அறிய அங்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
காஷ்மீர் விவகாரம் எங்களின் உள்நாட்டுப் பிரச்சனை என கூறும் இந்தியாவின் போக்கு நியாயமானது அல்ல. ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதியில் இந்தியா நிகழ்த்திவரும் மனித உரிமை மீறல்களை சர்வதேச சமுதாயம் கவனித்து வருகிறது என்பதை அவர்கள் உணர வேண்டும் என கூறியுள்ளார்.
-
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
பாகிஸ்தான் இருக்க வேண்டிய இடம் இதுதான்.. முகத்தில் அறைந்த அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கை -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல்












Click it and Unblock the Notifications