ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள்
மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று வரலாறு காணாத அளவுக்குச் சரிந்துள்ளன. ரூபாய் மதிப்பு சரிவு, மத்திய கிழக்கு மோதல் என பல்வேறு காரணங்களால் பங்குச்சந்தைகள் மிக மோசமான சரிவைச் சந்தித்துள்ளது. இதன் மூலம் இன்றைய தினம் ஒரே நாளில் சுமார் ₹10 லட்சம் கோடி முதலீடு துடைத்தெறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
மத்திய கிழக்கில் இப்போது பதற்றமான ஒரு சூழல் நிலவுகிறது. இந்த பதற்றம் மத்திய கிழக்கைத் தாண்டி உலகெங்கும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலகெங்கும் உள்ள பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிந்து வருகிறது. அமெரிக்கப் பங்குச்சந்தை வெள்ளிக்கிழமை மட்டும் கிட்டத்தட்ட 2% வரை சரிந்தது.

10 லட்சம் கோடி
இது இந்தியப் பங்குச்சந்தையிலும் நேரடியாக எதிரொலித்தது. இன்று திங்கள்கிழமை இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்தன. சென்செக்ஸ் 1,636 புள்ளிகள் குறைந்து 71,948 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல நிஃப்டி50, 488 புள்ளிகள் சரிந்து 22,331 என்ற நிலைக்குச் சென்றது. இதன் மூலம் ஒரே நாளில், சுமார் ₹10 லட்சம் கோடி முதலீடு துடைத்தெறியப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்திய ரூபாயின் வரலாற்றுச் சரிவு, ரிசர்வ் வங்கியின் அந்நிய செலாவணி கட்டுப்பாடுகள் ஆகியவை இந்த சரிவுக்குப் பிரதான காரணமாக இருக்கிறது. மேலும், போர் சூழல் காரணமாக முதலீட்டாளர்கள் ரிஸ்க் எடுப்பதை விரும்பவில்லை. இதனால் மற்ற சந்தைகளில் இருக்கும் தங்கள் முதலீடுகளை விற்றுவிட்டு, அமெரிக்காவில் முதலீடு செய்யக் கவனம் செலுத்துகிறார்கள்.. இதுவும் சரிவுக்குப் பிரதான காரணமாக இருந்துள்ளது.
கடும் சரிவு
இன்றைய தினம் ஒரு பங்கு உயர்ந்தது என்றால் 6 பங்குகள் வரை சரிந்துள்ளன. வங்கி மற்றும் நிதி சார்ந்த பங்குகளின் சரிவே இதற்குப் பிரதான காரணமாக அமைந்தன. ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எஸ்.பி.ஐ போன்ற வங்கிகளின் பங்குகள் 5% வரை சரிந்தன. அந்நிய செலாவணி தொடர்பாக ரிசர்வ் வங்கி சில முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், அதுவே நிதி பங்குகள் சரிவுக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது.
அதேபோல மத்திய கிழக்கில் நிலவி வரும் மோதலும் நிலைமையை மோசமாக்கி வருகிறது. மத்திய கிழக்கு பதற்றம் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை உச்சத்திற்குப் போய் வருகிறது. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை 3%க்கு மேல் உயர்ந்து ஒரு பேரல் $115ஐ தாண்டியது. ஐந்தாவது வாரமாக நீடிக்கும் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் மோதல், விநியோக சங்கிலியைப் பாதித்து, சரக்கு போக்குவரத்து அபாயங்களை அதிகரித்துள்ளது. இதுவே நிலைமையை மோசமாக மாற்றியுள்ளது.
ரூபாய் மதிப்பு
மேலும், ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்குச் சரிவைச் சந்தித்துள்ளது. இந்த மாபெரும் சரிவுக்கு அதுவும் முக்கிய காரணமாக இருக்கிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு முதல் முறையாக 95ஐ கடந்துள்ளது. வரலாறு காணாத அளவுக்கு 95.22 என்று அளவை ரூபாய் எட்டியது. மேலும், 10 ஆண்டுக் கால அரசுப் பத்திரத்தின் வட்டி விகிதம் 7%ஐ தாண்டியுள்ளது. இது சந்தை எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதையே காட்டுகிறது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
இதுபோல பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தனது முதலீடுகளை இந்தியாவில் இருந்து எடுத்து வருகிறார்கள். அதாவது இந்திய நிறுவனங்களில் செய்த முதலீட்டை விற்றுவிட்டு, அமெரிக்காவில் கவனம் செலுத்துகிறார்கள். கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் ₹4,367 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றதாகத் தெரிகிறது. இந்த மார்ச் மாதம் முழுக்கவே இதுபோல பங்குகளை விற்றே வந்துள்ளனர். இதுவும் பங்குகள் சரிய மற்றொரு முக்கிய காரணமாக இருக்கிறது.
-
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
அந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
வங்கி கணக்கில் வந்து விழுந்த ரூ.10 கோடி.. "வேண்டாம்" என திருப்பி கொடுத்த பெண்! என்ன காரணம் தெரியுமா -
ஈரான் காட்டிய பச்சைக்கொடி.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எல்பிஜி கப்பல்கள்.. கெத்து காட்டும் இந்தியா! -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க












Click it and Unblock the Notifications