இந்தியாவுடன் போரை விரும்பவில்லை நட்புடன் இருக்கவே விரும்புகிறோம்: நவாஷ் ஷெரீப்
இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் போரை விரும்பவில்லை நட்புடன் இருக்கவே பாகிஸ்தான் விரும்புவதாக அந்நாட்டு பிரதமர் நவாஷ் ஷெரீப் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இஸ்லாமாபாத்தில் நேற்று அந்நாட்டு அதிபர் மம்னூன் ஹூசைனும் நவாஷ் ஷெரீப்பும் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்குப் பின்னர் பிரதமர் நவாஸ் ஷெரீப் தி நேஷன் செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், இந்தியாவுடன் நட்புடன் இருக்கவே பாகிஸ்தான் விரும்புகிறது. அண்டை நாடுகள் மற்றும் உலக நாடுகளுடன் நட்புறவையே விரும்புகிறோம். அனைத்து அண்டை நாடுகளுடன் இணைந்து வளர்ச்சி அடையவே விரும்புகிறோம் என்று தெரிவித்தார்.

மேலும், இந்தியா- பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தையை மீண்டும் துவங்க வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் துவங்க பாகிஸ்தான் எப்போதும் தயாராக உள்ளது என்றும் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்புக்கு பிறகு வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் நவாஸ் ஷெரீப்- அதிபர் மம்னூன் ஹுசைனும் உள்நாட்டு விவகாரங்கள் மற்றும் அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நட்புறவை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு இந்திய தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நவாஷ் ஷெரீப் இவ்வாறு கூறியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
-
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
ஈரான் காட்டிய பச்சைக்கொடி.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எல்பிஜி கப்பல்கள்.. கெத்து காட்டும் இந்தியா! -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
வங்கி கணக்கில் வந்து விழுந்த ரூ.10 கோடி.. "வேண்டாம்" என திருப்பி கொடுத்த பெண்! என்ன காரணம் தெரியுமா -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications