சொந்த பங்களாவில் சொகுசாக வாழும் ஏழைப்பங்காளனே!... ஜெயக்குமாருக்கு எதிராக அதகள போஸ்டர்கள்!
சென்னை ராயபுரம் மற்றும் வடசென்னை தொகுதி அதிமுகவினர் சார்பாக அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக அவரின் சொந்த தொகுதி முழுவதும் எதிர்ப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் அம்மா அணியைச் சேர்ந்த முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றதும், ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்ட முன்னாள் சபாநாயகரான ஜெயகுமாருக்கு மீன்வளத்துறை அமைச்சர் பொறுப்புடன் நிதியமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் ஜெயகுமார் முதன்முதலில் தனது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசினார்.

பேச்சு ஒத்திவைப்பு
அப்போது நேரமின்மை காரணமாக விறுவிறுப்பாக வாசிப்பதாக சில நிமிடங்கள் வாசித்து பேரவையில் சிரிப்பலையை ஏற்படுத்தினார். எப்போதும் கலகலப்பாக இருக்கும் அமைச்சர் ஜெயகுமார், ஓ.பன்னீர்செல்வம் தான் ட்ரம்ப்பையே ஜெயிக்க வைத்ததாகக் கூறுவார் என்று தனது பேட்டியில் கூறியதால் அதிமுகவின் இரு அணிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருந்ததது தள்ளிப் போனது.

சுருதியை குறைத்த ஜெயக்குமார்
இதனையடுத்து தன்னுடைய கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார் ஜெயகுமார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வாங்கிய டோஸ் காரணமாக அடுத்தது எப்போது பேட்டி கொடுத்தாலும் எல்லா மீடியாக்களிடமும் பன்னீர் அணியை விமர்சிக்காமல், பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று ஒரே போடாக போட்டு வருகிறார் ஜெயக்குமார்.

போஸ்டர்கள்
இந்நிலையில் அமைச்சர் ஜெயகுமாருக்கு எதிராக ராயபுரம் தொகுதி முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும் எதிர்ப்பு போஸ்டர்கள் அமர்க்களப்படுகின்றன. 'சொந்த பங்களாவில் சகல வசதிகளுடன் வசித்து வரும் ஏழைப்பங்களானே!... சொந்த மகனை சசிகலா உதவியால் எம்.பியாக்க உன்னால்...உனக்காக 26 ஆண்டுகளாக உழைத்த எந்த மீனவ மக்களை உயர்த்தியுள்ளாய்?" என்று கேள்வி எழுப்பும் வகையிலான வாசகங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

யாரு பார்த்த வேலை
வடசென்னை தெற்கு மற்றும் ராயபுரம் அதிமுகவினர் என்று தெள்ளத்தெளிவாக பெயர் அச்சிடப்பட்டு இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. போஸ்டர் ஒட்டியவர்கள் எந்த அணி என்ற தேடுதலில் இறங்கியுள்ளது அதிமுக.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications