ஓபிஎஸ் அணி வசமாகிறது அதிமுக! மூத்த தலைவர்கள் ஓரணியில் கைகோர்ப்பு- சசிகலா பயங்கர ஷாக்!!
அதிமுகவின் மூத்த தலைவர்கள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அணியில் இணைந்து வருவதால் சசிகலாவுக்கு பயங்கர அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
சென்னை: அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் அடுத்தடுத்து முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் அணிதிரள்வதால் சசிகலா தரப்பு பயங்கர அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.
அதிமுக தலைமையை கைப்பற்றிய சசிகலா, முதல்வர் பதவியையும் கபளீகரம் செய்வதை அக்கட்சியினரால்ல் ஏற்க முடியவில்லை. இதனால் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுகவினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

முதல்வர் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக அடுத்தடுத்து அதிமுக மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதில் உச்சகட்டமாக அதிமுகவின் அவைத் தலைவராக இருக்கும் மதுசூதனனே இன்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் முன்னணி அல்லது இரண்டாம் கட்ட தலைவர்களாக இருந்த மதுசூதனன், ஓ. பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், கேபி முனுசாமி, பிஹெச் பாண்டியன், மைத்ரேயன் உள்ளிட்ட பலரும் ஓரணியில் இணைந்துள்ளனர். அதிமுகவின் அவைத் தலைவர் மதுசூதனன்; அதிமுக பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரும் ஓரணியில் கைகோர்த்துள்ளனர்.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நேற்று சசிகலாவுக்கு அருகே அமர்ந்திருந்தவர் மதுசூதனன். சசிகலாவை பொதுச்செயலராக்க முதன் முதலில் முன்மொழிந்தவரும் மதுசூதனன். இன்று அவரும் ஓபிஎஸ்-உடன் கை கோர்த்திருக்கின்றனர். இதனால் ஒட்டுமொத்தமாக அதிமுக, ஓபிஎஸ் அணியின் வசமாகும் என்பது உறுதியாக உள்ளது.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல்












Click it and Unblock the Notifications