மழை கொடுமையைவிட இவிங்க கொடுமை பெருங்கொடுமை!
சென்னை: தமிழக தலைநகர் சென்னை தண்ணீரில் தத்தளித்து வரும் நிலையில், பல சடலங்கள் தண்ணீரில் மிதந்து கொண்டுள்ள நிலையில், அதிமுக நிர்வாகி ஒருவர் நெல்லையில் வைத்துள்ள கட்-அவுட் மக்களின் கடும் கோபத்தை தூண்டுவதாக அமைந்துள்ளது.
நெல்லை மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ்.முத்துக்கருப்பன் என்பவர் வைத்துள்ளதாக கூறி ஒரு கட்-அவுட் போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Unbelievable levels of WTF. pic.twitter.com/sL6S24LSoy
— Rum (@KaapiRight) December 4, 2015 அந்த கட்-அவுட்டில், நீரில் மூழ்கியபடி ஜெயலலிதா ஒரு குழந்தையை தனது கையில் பிடித்து நீரில் மூழ்காமல் காப்பது போன்ற காட்சி இடம் பிடித்துள்ளது. அந்த குழந்தைதான் தமிழகம் என்ற அர்த்தத்தில், அந்த கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியாகி பெரும் மக்களால் பாராட்டப்பட்ட, பாகுபலி திரைப்படத்தில், ரம்யா கிருஷ்ணன் கதாப்பாத்திரம், ஆற்றில் மூழ்கிக்கொண்டே, குழந்தையை மட்டும் காப்பாற்றும். அந்த சீனை ஆல்டர் செய்து இந்த கட்-அவுட் பொருத்தியுள்ளார்.
பக்கத்திலுள்ள ஒரு டச்சிங் வாசகம் இப்படி சொல்கிறது, "தண்ணீரில் தத்தளித்த தமிழகத்தை தனித்து நின்று காப்பாற்றிய தரணி போற்றும் தாயே! எங்கள் அம்மா" என்று கூவுகிறது அந்த வாசகம்.
நெல்லையில் மழையின் தாக்கம் அதிகம் இல்லை என்பதால் மக்கள் இதை நம்பிவிடுவார்கள் என்று நினைத்து கட்-அவுட் வைத்துவிட்டார் போலும். ஆனால், தலைநகர் சென்னையில் மக்கள் படும் கஷ்டம் சொல்லி மாளவில்லை.
அரசு என்று ஒன்றே செயல்படவில்லை என்று கமல் முதல் கலாம் உதவியாளர் வரை கழுவி, கழுவி ஊத்திவிட்டனர். எத்தனையோ பேர் உதவி எண்களுக்கு போன் செய்தும், காப்பாற்ற ஆளில்லாமல் தவிப்பதாக குமுறிக்கொண்டுள்ளனர். ஆனால் மழைக்கு நடுவே இப்படி ஒரு கட்-அவுட்டை வைத்து, ஆதாயம் தேடிய இந்த நபர், தமிழக அரசியல் எந்த அளவில் உள்ளது என்பதை அப்பட்டமாக எடுத்துக்காட்டுகிறது.
-
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
கிளாம்பாக்கம் - மகேந்திரா வேர்ல்ட் சிட்டி.. சென்னையின் மிகப்பெரிய ப்ராஜெக்ட்.. எல்லாமே மாறப்போகுது -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?












Click it and Unblock the Notifications