தொகுதி பங்கீடு குறித்து தொடர்ந்து பேசுவோம்- கருணாநிதியை சந்தித்த பின்னர் குலாம்நபி ஆசாத் தகவல்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் தொகுதிகள் பங்கீடு தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் தெரிவித்தார்.
தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. கூட்டணிக்கு இறுதி வடிவம் கொடுக்கும் வகையிலும் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பதை உறுதி செய்வதற்காக கருணாநிதியை சந்திக்க குலாம் நபி ஆசாத் மற்றும் முகுல் வாஸ்னிக் ஆகியோர் சென்னை வருகை தந்தனர்.

சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் இருவரையும் வரவேற்றனர். முதலில் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய குலாம் நபி ஆசாத்தும் முகுல் வாஸ்னிக்கும் பின்னர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் சந்திக்க சென்றனர்.
கோபாலபுரம் சென்ற குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக்கை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், ராஜ்யசபா எம்.பி கனிமொழி ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் கருணாநிதியை இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின்போது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்ட 4 பேர் கொண்ட குழு, கனிமொழி மற்றும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் அமைக்கப்பட்ட 8 பேர் கொண்ட காங்கிரஸ் குழுவினரும் பங்கேற்றனர்.
கடந்த 2011 சட்டசபை தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் தற்போது 25 தொகுதிகளே ஒதுக்க திமுக முன் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜி.கே. வாசன் தனிக்கட்சியை தொடங்கி வெளியேறிவிட்டதால் காங்கிரஸுக்கு குறைந்த இடங்களை ஒதுக்க முடிவு செய்துள்ளது திமுக. இருப்பினும் தேமுதிக கூட்டணியில் இடம்பெறாததால், அதிக இடங்களை ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்துகிறது.
இன்றைய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குலாம்நபி ஆசாத், காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து கருணாநிதியுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்; தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய இன்னும் சிறிது காலம் ஆகும் என்றார்.
-
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு!












Click it and Unblock the Notifications