"பினாமி முதல்வர்" எடப்பாடி .. மு.க.ஸ்டாலின் "அட்டாக்"!
சசிகலாவின் பினாமி முதல்வர் எடப்பாடி, பெண்களை பாதுகாக்க முன்வர வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் சாடினார்.
சென்னை: பெண்கள், குழந்தைகளை பாதுகாப்பதற்கான திட்டங்கள் ஏதும் அதிமுக அரசு எடுக்கவில்லை. பினாமி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பெண்களைக் காக்க முன்வர வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த பழனியின் மகள் ரித்திகாவை (3) கடந்த சனிக்கிழமை முதல் காணவில்லை. இந்நிலையில் சிறுமி குப்பைக் கிடங்கில் சடலமாக கிடந்தாள்.

எண்ணூர் போலீஸார் விசாரணையில், குழந்தையிடம் இருந்த நகைக்காக அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த ரேவதி என்பவர் கடத்தி கொலை செய்தது அம்பலமானது.
இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை ரித்திகாவின் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சரியில்லை. தற்போதைய அதிமுக அரசு செயல்படாத அரசாக உள்ளது. பெருமளவில் பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் பலாத்காரத்துக்குள்பட்டும், நகை, பணத்துக்காக கொலை செய்யப்பட்டும் வருகின்றனர். பெண்களின் பாதுகாப்பிற்கான திட்டம் எதையும் இந்த அதிமுக அரசு இன்னும் செயல்படுத்தவில்லை.
சட்டம்-ஒழுங்கை காக்க வேண்டிய காவல்துறை கூவத்தூரில் காத்து கிடந்தது. மேலும் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளை தூக்கிப் போட காவல்துறை பயன்படுத்தப்படுகிறது.
காவல்துறையின் தலையாயப் பணியான சட்டம் ஒழுங்கை காக்கும் பணியில் அவர்கள் ஈடுபடவில்லை. எனவே சசிகலாவின் பினாமி முதல்வர் பழனிசாமி பெண்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட போரூர் சிறுமி ஹாசினியின் குடும்பத்தினரையும் அண்மையில் ஸ்டாலின் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிட காரணம் இதுதான்" - பிரச்சாரத்தில் ஓப்பனாக சொன்ன முதல்வர் ஸ்டாலின் -
எடப்பாடி பழனிசாமி ஆட்சியை நான்தான் காப்பாற்றிக் கொடுத்தேன்! எனக்கே சீட் இல்லை! தனபால் குமுறல் -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக் -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications