ராமமோகன் ராவிடம் ஐடி அதிகாரிகள் விசாரணை- எந்த நேரத்திலும் மகனுடன் கைது?
முன்னாள் தலைமை செயலர் ராமமோகன் ராவிடம் ஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை முடிவில் ராமமோகன்ராவ் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.
சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் ஊழல் புகார்களில் சிக்கியுள்ள தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலர் ராமமோகன் ராவ், அவரது மகன் விவேக், விவேக்கின் வக்கீல் அமலநாதன் ஆகியோரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் முடிவில் மூவரும் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.
தமிழக அரசின் தலைமை செயலராக இருந்தவர் ராமமோகன் ராவ். கான்டிராக்டர் சேகர் ரெட்டிக்கு ரூ10,000 கோடி மதிப்பிலான தமிழக அரசின் ஒப்பந்தங்களை அள்ளிக் கொடுத்தவர்.

சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ரூ131 கோடி ரொக்கம் மற்றும் 171 கிலோ தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். சேகர் ரெட்டி கொடுத்த தகவல்களின் அடிப்படையில் ராமமோகன் ராவ், அவரது மகன் விவேக் உள்ளிட்டோர் வீடுகளிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டு பணம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து ராமமோகன் ராவ் தலைமை செயலர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். தற்போது ராமமோகன் ராவ், அவரது மகன் விவேக், விவேக்கின் வழக்கறிஞர் அமலநாதன் ஆகியோரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையின் முடிவில் மூவரும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications