ஜெயலலிதா, சசிகலா சம்பந்தப்பட்ட அனைத்துமே மர்மம் தானே? போட்டுத் தாக்கும் ராமதாஸ்
கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மர்மம் நீடித்து வருகிறது. இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு எஸ்டேட் உள்ளது. இங்கு 90-க்கும் மேற்பட்ட அறைகளை கொண்ட பிரம்மாண்ட பங்களா உள்ளது. ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போது அவ்வப்போது அங்கு சென்று ஓய்வு எடுப்பார்.
மிகுந்த பாதுகாப்பு நிறைந்த இந்த கொடநாடு எஸ்டேட்டில் தனியார் நிறுவனம் மூலம் பாதுகாப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்களை தவிர யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் எளிதில் நுழைந்துவிட முடியாது

பாதுகாப்பு நிறைந்த கொடநாடு
அந்த அளவிற்கு பாதுகாப்பு நிறைந்த பகுதியாக கொடநாடு எஸ்டேட் திகழ்ந்து வந்தது. இந்த நிலையில் ஜெயலலிதா மறைவிற்கு பின்பு கொடநாடு எஸ்டேட் களை இழந்துள்ளது. மேலும் சொத்து குவிப்பு வழக்கில் கொடநாடு எஸ்டேட்டும் சேர்க்கப்பட்டு இருக்கிறது. எனவே அபராத தொகை வசூலிக்க கொட நாடு எஸ்டேட் கையகப்படுத்தப்படும் என கூறப்பட்டது.

பல கோணங்களில் விசாரணை
இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 10-வது நுழைவு வாயிலில் இருந்த காவலாளி ஓம்பகதூர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
|
அனைத்துமே மர்மம் தானே
இந்நிலையில் அரசியல் நிலவரங்களை டிவிட்டர் பக்கத்தில் போட்டு தனது பாணியில் கிழித்து வரும் பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த கொலை குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார். அதில் கொடநாடு பங்களா கொலையாளி கொலையில் மர்மம் நீடிப்பதாக வெளியான தகவலை பதிவிட்டுள்ள ராமதாஸ், ஜெயலலிதா சசிகலா சம்பந்தப்பட்ட அனைத்துமே மர்மம் தானே என்று கூறியுள்ளார்.

ஆச்சரியம் இல்லை
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மமே இன்னும் விலகாமல் உள்ளது. இந்நிலையில் அவரது பங்களாவில் காவலாளி கொலை செய்யப்பட்டிருப்பதிலும் மர்மம் நீடிப்பதில் ஆச்சரியம் இல்லை என்பது போல் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் காவலாளி என்பதையும் ராமதாஸ் கொலையாளி என்றே குறிப்பிட்டுள்ளார்.
-
பிரச்சார வாகனத்தால் பறிபோன எம்.எல்.ஏ பதவி? - ஜெயலலிதாவுக்கு எதிராக பி.ஹெச்.பாண்டியன் செய்த சம்பவம்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம்












Click it and Unblock the Notifications