ஜெயலலிதாவின் கால்களை அகற்றவில்லை... உறுப்பு மாற்று சிகிச்சை செய்யவில்லை- அப்பல்லோ மருத்துவர்கள்
ஜெயலலிதாவிற்கு எந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையும் செய்யவில்லை, அவரது கால்கள் அகற்றப்படவில்லை என்று அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை: ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் நிலவுவதாகவும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் எதிர்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி விளக்கம் அளித்த மருத்துவர்கள் ஜெயலலிதாவின் கால்கள் அகற்றப்படவில்லை என்று தெரிவித்தனர்.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து பல்வேறு வதந்திகள் நிலவுகின்றன. அவருடைய பற்கள், கால்கள் நீக்கப்பட்டு விட்டதாகவும் தகவல் பரவி வருகின்றன. இந்த நிலையில் இன்று அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த டாக்டர் ரிச்சர்ட் பியல் ஆகியோர் இன்று விளக்கம் அளித்தனர்.

ஜெயலலிதா மரணம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே செய்தியாளர் சந்திப்பு என மருத்துவர் ரிச்சர்ட் பியல் விளக்கம் அளித்தார். மேலும் மருத்துவ முறைகளுக்கு உட்பட்டே ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது எனவும் லண்டன் மருத்துவர் தெரிவித்தார்.
காய்ச்சல் என்று மருத்துவமனைக்கு ஜெயலலிதா அழைத்து வரப்பட்ட போது சுயநினைவுடன்தான் இருந்தார். அவருக்கு நுரையீரல் இதயத்தில் நோய் தொற்று ஏற்பட்டதாகவும், நோய் தொற்றின் தீவிரம் அதிகரித்ததன் காரணமாகவே அவர் சுயநினைவை இழந்தார் என்றும் தெரிவித்தனர்.

டிரக்கியோஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர்தான் அவர் சுயநினைவுக்கு வந்தார் என்றும் அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். ஜெயலலிதாவிற்கு எந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையும் செய்யவில்லை. அவரது கால்களை அகற்றவில்லை என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது பற்களை அகற்றவில்லை என்று சுதா ஷேசய்யன் தெரிவித்தார்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications