போயஸ் கார்டன் பங்களாவுக்குள் நுழையும் 'டெல்லி'.... தடுக்க சசி கோஷ்டி ஏவும் ஜெ. 'ஆவி'
போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா பங்களாவில் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தக் கூடும் என கூறப்படுகிறது. இதைத் தடுக்கவே சசிகலா கோஷ்டி ஆவி கதையை பரப்புவதாக கூறப்படுகிறது.
சென்னை: தினகரன் வழக்கை முன்வைத்து போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் பங்களாவுக்குள் வருமான வரி மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தலாம் என கூறப்படுகிறது. இதைத் தடுக்கும் வகையில் போயஸ் கார்டன் பங்களாவுக்குள் ஜெயலலிதாவின் ஆவி நடமாடுவதாக ஒரு தகவலை சசிகலா கோஷ்டி பரப்பிவிடுகிறது.
ஜெயலலிதாவின் மர்ம மரணத்துக்கு இன்னமும் விடைகிடைக்கவில்லை. அதேநேரத்தில் ஜெயலலிதாவின் ஆவியை முன்வைத்து நாள்தோறும் பல ஆரூடங்கள் ரெக்கை கட்டி பறந்து கொண்டே இருக்கின்றன.
ஜெயலலிதாவின் சமாதிக்கு போய் தியானம் செய்தவர்கள் எல்லோருக்கும் சிக்கலாகிவிடுகிறது என்கிற தகவல் தீயாக பரவியது. ஜெயலலிதாவின் ஆவி உக்கிரமாக இருப்பதால்தான் இப்படியெல்லாம் நடக்கிறது என பரப்பிவிடப்பட்டது.

கைவிடப்பட்ட சமாதி
இதையடுத்து ஜெயலலிதா சமாதி கைவிடப்பட்டு கேட்பாரற்று கிடக்கிறது. இதேபோல் போயஸ் கார்டன் பங்களாவில் ஜெயலலிதா ஆவி என்கிற ஒரு கதை உலவுகிறது.

ஓட ஓட துரத்தும் ஆவி
ஜெயலலிதா யாரையெல்லாம் துரோகியாக கருதினாரோ அவர்கள் போயஸ் பங்களாவுக்குள் நுழைந்தாலே அந்த ஆவி ஓட ஓட விரட்டுதாம். கொடநாடு மர்ம கொலைகளுக்கும் கூட அந்த ஆவியின் திருவிளையாடலே காரணம் எனவும் கூறப்படுகிறது.

உக்கிர ஓலம்
அதுவும் மாலை ஆகிவிட்டாலே ஜெயலலிதா ஆவியின் ஓலம் உக்கிரமாகிறதாம். அது விடிய விடிய அலறிக் கொண்டே இருக்கிறதாம்.

விவேக் தயக்கம்
இதனால்தான் போயஸ் கார்டன் பங்களாவுக்குள் குடியேற விவேக் ரொம்பவே யோசிக்கிறாராம். அதேநேரத்தில் ஜெயலலிதாவின் ஆவி நடமாடுகிறது என்பதெல்லாமே சசிகலா கோஷ்டியால் திட்டமிட்டே பரப்பப்படுகிற வதந்தி எனவும் கூறப்படுகிறது.

கட்டுக்கதை?
தினகரன் மீதான வழக்கு மற்றும் ஜாஸ் சினிமாஸை முன்வைத்து விவேக்குக்கான வலை ஆகியவற்றின் மூலம் போயஸ் கார்டன் பங்களாவுக்குள் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நுழையக் கூடும் என கூறப்படுகிறது. அப்படி அதிகாரிகள் நுழையாமல் இருப்பதைத் தடுக்கத்தான் இந்த ஆவி கதை என்கிறது அதிமுக வட்டாரங்கள்.
-
பிரச்சார வாகனத்தால் பறிபோன எம்.எல்.ஏ பதவி? - ஜெயலலிதாவுக்கு எதிராக பி.ஹெச்.பாண்டியன் செய்த சம்பவம்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம்












Click it and Unblock the Notifications