சசிகலா குடும்பமே கட்சியை நடத்துகிறது.. மதுசூதனன் கொந்தளிப்பு !
சசிகலா குடும்பம் தான் கட்சியை நடத்துகிறது என்று அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் கூறியுள்ளார்.
சென்னை: சசிகலா மட்டும் கட்சியை நடத்துவார் என்று எதிர்பார்த்தேன், ஆனால் அவரது குடும்பமே கட்சியை நடத்துகிறது என்று அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுகவையும் ஆட்சியையும் சசிகலா கைப்பற்றுவதை சகிக்க முடியாத நிர்வாகிகள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு படையெடுத்து வருகின்றனர். இதனிடையே அக்கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் முதல்வர் பன்னீர் செல்வம் ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்தனர்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த மதுசூதனன் கூறுகையில், சசிகலாவை நான் தான் ஆதரித்தேன். சசிகலா கட்சியை நடத்துவார் என்று எதிர்பார்த்தேன், ஆனால் அவரது குடும்பமே கட்சியை நடத்துகிறது. பொருளாளராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு சில அவமானங்கள் இழைக்கப்பட்டதாக கேள்விப்பட்டேன். பொருளாளருக்கே இந்த நிலைமை என்றால், நாளைக்கு எனக்கும் அதே நிலை நடக்கும் என்று நினைத்தேன்.
அதிமுக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து கட்சியில் இருந்து வருகிறேன். அதனால் தான் கட்சியை காப்பற்றனும் என்ற நோக்கத்தோடு வெளியேறினேன், அதிமுகவுக்காக 49 வழக்குகளை சந்தித்துள்ளேன். நியாயம் நடக்கும், அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து பொறுந்திருந்து பாருங்கள் என்றார்.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல்












Click it and Unblock the Notifications