வங்கியில் பணம் இல்லாதவர்களுக்கு ரூ.10,000 செலுத்துகிறார் மோடி.. தேனியில் பரபரப்பை ஏற்படுத்திய வதந்தி
வங்கிக் கணக்கில் இருப்புத் தொகை இல்லாதவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் பணத்தை பிரதமர் மோடி செலுத்துகிறார் என்று வதந்தி பரவியதால் தேனியில் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி: செல்லாத ரூபாய் நோட்டு பிரச்சனை பெரும் தலைவலியாக மக்கள் மத்தியில் உருவெடுத்துள்ளது. இந்த நேரத்தில் வதந்தியை கிளம்பி மக்களை குழப்பி வருகின்றனர் சில சமூக விரோதிகள். பொதுமக்களின் வங்கிக் கணக்கில் இருப்பு தொகை எதுவும் இல்லை என்றால் அந்தக் கணக்கில் 10 ஆயிரம் ரூபாய் வைப்பு தொகையாக பிரதமர் மோடி செலுத்துகிறார் என்ற வதந்தி தேனியில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணி இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. அதற்காக மக்கள் தங்களது ரேஷன் அட்டைகளையும் ஆதார் அட்டைகளையும் நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு வந்து பதிவு செய்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், யாரோ சில சமூக விரோதிகள், வங்கிக் கணக்கில் பணமே இல்லாதவர்களுக்கு பிரதமர் மோடி 10 ஆயிரம் ரூபாய் பணத்தை வங்கியில் செலுத்துகிறார் என்ற வதந்தியை கிளம்பிவிட்டுள்ளனர். இந்த வதந்தி காட்டுத் தீ போல தேனி, அல்லி நகரம் உள்ளிட்ட சுற்றுப்பட்டு பகுதிகளுக்கு பரவியது. இதனை உண்மை என்று நம்பி ஏராளமான பெண்கள் நகராட்சி அலுவலகம் நோக்கி படை எடுத்தனர்.
இதனையடுத்து, இது வதந்தி என்றும் மோடி அப்படி ஒன்றும் அறிவிக்கவில்லை என்றும் நகராட்சி நிர்வாகம் பொதுமக்களிடம் தெரிவித்தது. ஆனாலும், பொதுமக்கள் நம்பத் தயாராக இல்லை. தங்களுடைய ரேஷன் அட்டை மற்றும் ஆதார் அட்டைகளுடன் நீண்ட நேரம் நகராட்சி வாசலிலேயே காத்துக் கிடந்தனர். 10 ஆயிரம் வங்கிக் கணக்கில் செலுத்துவது என்ற தகவல் வெறும் வதந்தித்தான் என்பது நேரம் ஆக, ஆக மக்களுக்கு புரியத் தொடங்கியது. பின்னர், அங்கிருந்து ஒவ்வொருவராக ஏமாற்றத்துடன் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றனர்.
-
இறுதி கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்! மின்நிலையங்களில் திரளும் இளைஞர்கள் -
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
நகைக்கடன் வைத்த 3 பேரில் ஒருவர் கவனிக்கலனா பிரச்சனை? RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது? -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
நாதக கூட்டத்தில் ஒலித்த டிவிகே கோஷம்.. டீயாடா விக்கிறாய்? தற்குறிகள்! டென்ஷனான சீமான்..ஒரே பரபரப்பு -
கூட்டணி மாறியதால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலை! ஆனால் அது உண்மைதான்! எடப்பாடி பழனிசாமி -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம்












Click it and Unblock the Notifications