அதிமுகவை விட்டு வெளியேறுகிறது சசி கோஷ்டி! தனி கட்சி தொடங்க ஆலோசனை!
டெல்லி நெருக்கடியால் சிறைவாசங்களைத் தவிர்க்க அதிமுகவை விட்டு வெளியேறி தனிக் கட்சி தொடங்கிவிடலாம் என தீவிர ஆலோசனையில் இருக்கிறதாம் சசிகலா கோஷ்டி.
சென்னை: டெல்லி நெருக்கடியைத் தொடர்ந்து அதிமுகவை விட்டு வெளியேறி தனி கட்சி தொடங்கிவிடலாமா என்பது குறித்து சசிகலா கோஷ்டி ஆலோசித்து வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவை கபளீகரம் செய்தது சசி கோஷ்டி. சசிகலா முதல்வராகவும் ஆசைப்பட்டார். ஆனால் கிடைத்தது சிறை தண்டனைதான்.

தினகரனுக்கு திஹார்
அதேபோல் சசிகலாவின் அரசியல் வாரிசாக அடையாளம் காட்டப்பட்ட டிடிவி தினகரனும் ஆர்கே நகர் இடைத் தேர்தல் மூலமாக முதல்வராகிவிடலாம் என கணக்குப் போட்டார். ஆனால் தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுத்த வழக்கில் திஹார் சிறைதான் அவருக்கு கிடைத்து.

டெல்லி விருப்பம்
டெல்லியைப் பொறுத்தவரையில் சசிகலா கோஷ்டி யாருமே இல்லாத அதிமுக என்கிற ஒன்றையே விரும்புவது தெள்ளத் தெளிவான ஒன்று. சசிகலா, தினகரனைத் தொடர்ந்து இளவரசி மகன் விவேக் அரசியலுக்கு வந்தாலும் அவருக்கு காப்பு ரெடியாக இருக்கிறது.

தனி கட்சி
இதனால் அதிமுகவை விட்டு ஒரேயடியாக விலகி சொத்துகளைப் பாதுகாக்க தனி கட்சி ஒன்றை தொடங்கிவிடலாமே என்கிற தீவிர ஆலோசனையில் இருக்கிறதாம் சசிகலா கோஷ்டி. அப்படி தனி கட்சி தொடங்கும் நிலையில் தங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது; டெல்டா மாவட்டங்களில் நம்மால் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்க முடியும் என்பதும் சசி கோஷ்டி கணக்கு.

நடராஜன் யோசனை
இந்த யோசனையை முன்வைத்ததே சசிகலாவின் கணவர் நடராசன்தானாம். தினகரன், திவாகரன் உள்ளிட்டோர் ஆளுக்கு ஒரு திசையில் நின்று அடித்து கொள்வதைத் தவிர்க்கவும் தனிக்கட்சி தொடங்கலாம் என நினைக்கிறதாம் சசி அண்ட்கோ. அப்போதும் தங்களுக்கு சில கட்சிகள், இயக்கங்கள் ஆதரிக்கும் என்பதுதான் சசி கோஷ்டியின் ப்ளானாம்.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல்












Click it and Unblock the Notifications