ஜெயலலிதாவுக்கு கொடுத்த சிகிச்சைகள் என்ன..? முதல் முறையாக பதிலளித்த சசிகலா
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து முதல் முறையாக சசிகலா வெளிப்படையாக பேசியுள்ளார்.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் பற்றி அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள சசிகலா தகவல் தெரிவித்து பேசினார்.
ஜெயலலிதா மறைவால் காலியாக இருந்த அதிமுக பொதுச்செயலாளர் பதவியில், ஜெயலலிதாவின் தோழி, சசிகலா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். போயஸ் இல்லத்தில் இருந்து மதியம் 12.10 மணியளவில் அவர் காரில் கிளம்பி, ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகம் வந்தார்.
எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சசிகலா பின்னர் ஜெயலலிதா புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பிறகு, அதிமுக பொதுச்செயலாளருக்கான இருக்கையில் அமர்ந்து தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

முதல் பேச்சு
அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவை நியமித்து கடந்த வியாழக்கிழமை அதிமுக பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் அதை ஏற்றுக்கொண்டு சசிகலா இப்பதவிக்கு வந்துள்ளார். இதன்பிறகு கட்சி நிர்வாகிகள் மத்தியில் முதல் முறையாக சசிகலா உரையாற்றினார். அது, டிவி சேனல்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது, ஜெயலலிதாவின் உடல் நலம் மற்றும் சிகிச்சை குறித்து அவர் பேசியதாவது:

கனவிலும் நினைக்கவில்லை
நான் கனவிலும் கூட நினைக்காத ஒன்று.. கற்பனை செய்து கூட பார்க்க முடியாத ஒன்று நடந்துவிட்டது. தலையில் இடி வந்து விழுந்ததை போல, நன்கு உடல் நலம் தேறிவந்த நம் அம்மா, நம்மை விட்டு பிரிந்து விட்டார். தன்னை நம்பி வந்த யாரையும் கைவிடாதவர், தனது மரணத்தின் மூலம், நம் அனைவரையும் கைவிட்டுவிட்டார்.

75 நாட்கள் போராட்டம்
நம் அம்மாவுக்கு, இந்திய இயக்கம்தான் வாழ்க்கை, எனக்கோ அம்மாதான் வாழ்க்கை (கண் கலங்குகிறார்). ஆனால் இறைவன், தன் அன்பு மகளை, தன்னிடம் அழைத்துக் கொண்டார். 75 நாட்கள் எவ்வளவோ போராட்டங்கள். நம் அம்மாவை மீட்டுவிட வேண்டும் என்ற மருத்துவர்கள் போராட்டத்தோடு, கோடான கோடி தொண்டர்களின் ஆன்மீக வழிபாடுகளும் ஒன்று சேர,
அவை நம் அம்மாவை காப்பாற்றிவிடும் என உறுதியாக நம்பினேன்.

தனியறை வந்தார்
அதி தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து தனியறைக்கு வரும் அளவுக்கு, அம்மாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. எய்ம்ஸ் மருத்துவர்களை வரவழைத்தும், தலை சிறந்த சிகிச்சைகளை மேற்கொண்டோம். லண்டன் மருத்துவர்களை தொடர்ந்து, சிங்கப்பூர் மருத்துவர்களின் பிசியோ தெரபி சிகிச்சை தொடங்கப்பட்டது.

வீடு திரும்ப திட்டம்
இன்னும் சில நாட்களில் அம்மாவை பூரண நலம் பெற்ற முழு மதியாக, போயஸ் தோட்டத்திற்கு அழைத்து வந்துவிடுவேன் என்று நம்பியிருந்த நேரத்தில், அம்மாவின் இதய துடிப்பை நிறுத்தி, 10 கோடி தமிழ் மக்களின் பாசத்தாயை நம்மிடமிருந்து இறைவன் பறித்துக் கொண்டான்.

தேவதையில்லாத மாடம்
இன்று நாட்டு அரசியலையே தென்னாட்டு பக்கம் திருப்பி காட்டிய, தேவதையில்லாத அரசியல் மாடம் களையிளந்து நிற்கிறது. எனக்கோ அனைத்தையும் இழந்துவிட்டு நிற்கிற நிர்கதி நிலை. சில நிமிடங்கள் மட்டுமே அம்மாவை சந்தித்தவர்கள், சில வினாடிகள் மட்டுமே அம்மாவிடம் பேசியவர்களே அம்மாவின் பிரிவில் துடிக்கிறார்கள் என்றால், 33 வருடங்கள் அம்மாவிடம் மட்டுமே என் வாழ்நாட்களை கரைத்துவிட்ட எனக்கு, எப்படி இருக்கும் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது (கண்ணீர்).
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications