கேட்டது பொருளாளர் பதவி.. யாருக்கு வேணும் அமைப்பு செயலர் போஸ்ட்... கொந்தளிக்கும் செங்கோட்டையன்
அதிமுக அமைப்புச் செயலராக தம்மை சசிகலா நியமித்ததில் அதிருப்தியில் இருக்கிறாராம் செங்கோட்டையன். அதிமுக பொருளாளர் பதவியே தமக்கு வேண்டும் என்பதில் செங்கோட்டையன் உறுதியாக இருக்கிறாராம்.
சென்னை: அதிமுகவில் முக்கியமான பொருளாளர் பதவியைத்தானே கேட்டேன்... பத்தோடு பதினொன்றாக அமைப்புச் செயலர் பதவியை தருவதா? என சசிகலாவுக்கு எதிராக கொந்தளிக்கிறாராம் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா, அதிமுக பொதுச்செயலராக முயற்சித்த போது அதை எதிர்த்தவர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். ஆனால் மன்னார்குடி தரப்பு நிச்சயம் உங்களுக்கு கட்சியிலும் ஆட்சியிலும் உரிய மரியாதை தரப்படும் என கூறி செங்கோட்டையனை சமாதானப்படுத்தியது.

எதுவும் கிடைக்கவில்லை
இதனால் மதுசூதனன் உள்ளிட்டோருடன் சசிகலாவை பொதுச்செயலராக்க கோரி போயஸ் கார்டனில் வரிசை கட்டி நின்றார் செங்கோட்டையன். இருந்தபோதும் உறுதியளித்தபடி எந்த பதவியுமே செங்கோட்டையனுக்கு கிடைக்கவில்லை.

அமைப்புச் செயலர்
இந்த நிலையில் திடீரென அமைப்புச் செயலராக பலரை நியமித்தார் சசிகலா. அதில் செங்கோட்டையனும் ஒருவர். ஆனால் இந்த நியமனத்தில் கடுமையான அதிருப்தியில் இருக்கிறாராம் செங்கோட்டையன்.

கொந்தளிப்பு
தாம் கேட்டது அதிமுகவின் முக்கியமான பொருளாளர் பதவி; அதைத் தராமல் பத்தோடு பதினொன்றாக அமைப்புச் செயலர் பதவியை பிச்சை போல போடுவதாக என கொந்தளித்து போனாராம் செங்கோட்டையன். சசிகலா தரப்போ, முதல்வர் பதவியை ஓ. பன்னீர்செல்வத்திடம் இருந்து பறிக்கப் போகிறோம்; பொருளாளர் பதவியையும் அவரிடம் இருந்து பறித்தால் மோசமான விளைவுகள் ஏற்படும் என அச்சப்படுகிறதாம்.

பொன்னையன்
இதே பொருளாளர் பதவிக்காகத்தான் பொன்னையனும் முறுக்கிக் கொண்டிருக்கிறார். இதனால் அவர் அதிமுக நிகழ்ச்சிகளில் அதிகம் தலைகாட்டாமல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம்












Click it and Unblock the Notifications