ஓபிஎஸின் காலம் கடந்த உண்ணாவிரதப் போராட்ட முடிவை வரவேற்கிறேன்: மு.க.ஸ்டாலின்
ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதி விசாரணை கோரி ஓ. பன்னீர் செல்வம் உண்ணாவிரத போராட்டம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதி விசாரணை கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் உண்ணாவிரத போராட்டத்திற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து நீதி விசாரணை வேண்டும் என்று கோரி மார்ச் 8-ம் தேதி முதல் ஓ. பன்னீர் செல்வம் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளார். இதற்கு அனுமதி கேட்டு சென்னை காவல் ஆணையரிடம் ஓபிஎஸ் சார்பில் மதுசூதனன் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

இந்த நிலையில் சென்னையில் திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பேசுகையில், அதிமுக ஆட்சியை சட்டப்பூர்வ, அமைதியான ஜனநாயக புரட்சி மூலம் அகற்றி, திமுக ஆட்சியை நிலைபெற செய்வதே நமது ஒரே செயல்திட்டம் என சூளுரை ஏற்போம்.
அந்த சூளுரையே நமது சிந்தனை, சொல், செயல் அனைத்திற்கும் இனி அடிநாதமாக அமையட்டும் என்று, இந்த நாளில் அறைகூவல் விடுக்கின்றேன் என்று கூறினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் கூறுகையில், தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலைகள் குறித்து மக்களுக்கு எடுத்துக்கூற பேச்சாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. அதிமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும், அதற்கு எவ்வாறு செயல்பட வேண்டுமென்பது குறித்து ஆலோசனை நடத்தினோம். மேலும் முதல்வர் பதவியில் இருந்தபோது ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்காதது ஏன்? என்றும் இருப்பினும் ஓபிஎஸின் காலம் கடந்த உண்ணாவிரதப் போராட்ட முடிவை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல்












Click it and Unblock the Notifications