குடும்பப் பிரச்சினையால் விவசாயிகள் உயிரிழப்பதாக கொச்சைப்படுத்துவதா? திருமாவளவன் காட்டம்
தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: குடும்பப் பிரச்சினையால் விவசாயிகள் உயிரிழப்பதாக தமிழக அரசு கொச்சைப்படுத்துகிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும்,பயிர்கள் கருகியதால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து தலா 10 ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் வரலாறு காணாத வகையில் பருவமழை பொய்த்துப் போய்விட்டது. காவிரியில் நீர் வராமல் பாதிக்கப்பட்டிருந்த விவசாயிகள் பருவமழை பொய்த்துப் போனதால் வாழ்வாதாரத்தை இழந்து மனமுடைந்து போயுள்ளனர்.

வறட்சியால் பயிர்கள் கருகிப்போனதைக் கண்ட அதிர்ச்சியாலும், கடன் சுமையாலும் கடந்த சில மாதங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மாரடைப்பிலும், தற்கொலையிலும் உயிரிழந்துள்ளனர். இன்று (30.12.2016) ஒரே நாளில் மட்டும் ஐந்து விவசாயிகள் மரணம் அடைந்திருப்பது இதயத்தைப் பிளப்பதாயிருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அளவில் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை அதிகமாக இருக்கும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு இருந்துவருகிறது. 2014 ஆம் ஆண்டில் மட்டும் 68 விவசாயிகள் தமிழ்நாட்டில் தற்கொலை செய்துகொண்டனர் என தேசிய குற்ற ஆவண மைய அறிக்கை தெரிவிக்கிறது. பயிர் பொய்த்துப்போவதும், கடன் சுமையும் தான் விவசாயிகள் தற்கொலைக்கு முதன்மையான காரணம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசோ அதற்குக் காரணம் குடும்பப் பிரச்சனை எனச் சொல்லி விவசாயிகளின் சாவையும் கொச்சைப் படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்கவேண்டுமென கடந்த ஒருமாத காலமாகவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்திவருகிறது. இப்போது தமிழ்நாட்டிலிருக்கும் அனைத்துக் கட்சிகளுமே அந்தக் கோரிக்கையை எழுப்பிவருகின்றனர். இனியும் தாமதம் செய்யாமல் தமிழ்நாட்டை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்துகிறோம்.
பயிர் கருகியதால் தற்கொலை செய்துகொண்ட, மாரடைப்பில் உயிர்நீத்த விவசாயிகளின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து தலா பத்து லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும்.
வறட்சியின் காரணமாகவும் மோடி அரசின் செல்லா நோட்டு நடவடிக்கையின் காரணமாகவும் விவசாயத் தொழிலாளர்கள் வேலையின்றித் தவிக்கின்றனர். அவர்களுக்கும் உதவும் விதமாக நூறுநாள் வேலையை இந்த ஆண்டு 200 நாட்களாக உயர்த்தி அறிவிக்கவேண்டும் எனத் தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications