தேமுதிக-104, மதிமுக- 29; தமாகா-26; இடதுசாரிகள், வி.சி- தலா 25 தொகுதிகள்: அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
சென்னை: தேமுதிக, மக்கள் நலக்கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி. சட்டசபைத் தேர்தலில் 26 தொகுதிகளில் தமாகா போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தே.மு.தி.க. 104 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மதிமுக 29 தொகுதிகளில் போட்டியிடுகிறது. த.மா.கா. 26 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் தலா 25 கட்சிகளிலும் போட்டியிடுகின்றன.

மக்கள் நல கூட்டணி தலைவர்கள் தேனாம்பேட்டையில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் ஜி.கே.வாசனை சந்தித்து கூட்டணி குறித்து இறுதி கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆலோசைனயில் வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரரசன் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் அங்கிருந்து வாசன், மக்கள் நல கூட்டணி தலைவர்கள் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு விஜயகாந்தை சந்தித்து பேசினர். அப்போது யார் யார் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்ற ஆலோசனை நடத்தினர்.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் ஒவ்வொரு கட்சிக்கும் ஒதுக்கப்படும் தொகுதிகளை கூட்டணி கட்சி தலைவர்கள் இறுதி செய்தனர்.
அதன்படி தே.மு.தி.க. 104 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மதிமுக 29 தொகுதிகளில் போட்டியிடுகிறது. த.மா.கா. 26 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகள் தலா 25 கட்சிகளிலும் போட்டியிடுகின்றன.
கடந்த மார்ச் 23ம் தேதி மக்கள் நலக்கூட்டணி தேமுதிக கூட்டணி அமைந்த போது 124 தொகுதிகள் போட்டியிடும் எனவும், மக்கள் நலக்கூட்டணி 110 தொகுதிகளில் போட்டியிடும் எனவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் இணைந்துள்ளதால் தேமுதிகவும், மக்கள் நலக்கூட்டணியும் இணைந்து 26 இடங்களை ஜி.கே. வாசனுக்கு விட்டுக்கொடுத்துள்ளனர்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்!












Click it and Unblock the Notifications